தேமுதிக வழக்குரைஞர் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் !

 
ஜல்லிக்கட்டு உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் தேமுதிகவைச் சேர்ந்த வழக்குரைஞர் ஜி.எஸ். மணி நேற்று தாக்கல் செய்தார். மேலும் உச்ச நீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டு மீதான நிலுவையில் உள்ள வழக்குகள் மீதான விசாரணையில் தன்னையும் மனுதாரராகச் சேர்த்துக் கொள்ள அனுமதிக்கும்படியும் அவர் கேரிக்கை விடுத்துள்ளார்.
 
ஜல்லிக்கட்டு தொடர்பாக ஜி.எஸ். மணி தனது மனுவில் தெரிவித்துள்ளதாவது :-
தமிழ்நாட்டில் பாரம்பரியமாக நடத்தப்பட்டு வந்த ஜல்லிக்கட்டு விளையாட்டுப் போட்டிகளில் காளைகளை ஈடுபடுத்த அனுமதி மறுத்து உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பால் அந்தப் போட்டிகளை நடத்த முடியாத நிலை உருவாகியுள்ளது. இதையடுத்து, காட்சிப்படுத்தும் விலங்குகள் பட்டியலில் உள்ள போதும், காளைகளை துன்புறுத்தாமல் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு, ரேக்ளா பந்தயம் ஆகியவற்றுக்கு அனுமதி அளித்து மத்திய அரசு அரசாணை வெளியிட்டது. ஆனால், அதற்கும் உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இது தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்குகள் மீதான விசாரணையில் எனது தரப்பு வாதங்களை முன்வைக்க அனுமதி அளிக்க விரும்புகிறேன்.
 
 
தேமுதிக சார்பில் தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டுள்ளேன். அதைத் தவிர இந்த மனு தாக்கலுக்கும் அரசியலுக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது. மூத்த வழக்குரைஞரை வைத்து ஒவ்வொரு விசாரணைக்கும் தலா ரூ.5 லட்சம் வரை செலவு செய்து வழக்காடுவதற்கும் எனக்கு நிதி வசதியில்லை. ஆனால், மக்களின் அடிப்படை உரிமை மறுக்கப்படும் இந்த விஷயத்தில் வாதிட எனக்கு உரிமை உள்ளது என்பதால் இந்த வழக்கில் என்னையும் மனுதாரராகச் சேர்த்து வாதத்தை முன்வைக்க அனுமதிக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
ஜல்லிக்கட்டுக்கு விதித்த தடை தொடர்பான தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனு, ஜல்லிக்கட்டு ஏற்பாட்டாளர்கள் தாக்கல் செய்துள்ள மனு ஆகியவற்றின் மீதான விசாரணை நீதிபதிகள் அறையில் 21-01-2016 நடைபெறும் என்று ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அப்போது ஜி.எஸ். மணியின் மனுவும் பரிசீலனைக்கு ஏற்கப்படலாம் .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

Entertainment News

Popular Categories