February 24, 2026, 12:09 PM
30.3 C
Chennai

தேமுதிக வழக்குரைஞர் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் !

 
ஜல்லிக்கட்டு உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் தேமுதிகவைச் சேர்ந்த வழக்குரைஞர் ஜி.எஸ். மணி நேற்று தாக்கல் செய்தார். மேலும் உச்ச நீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டு மீதான நிலுவையில் உள்ள வழக்குகள் மீதான விசாரணையில் தன்னையும் மனுதாரராகச் சேர்த்துக் கொள்ள அனுமதிக்கும்படியும் அவர் கேரிக்கை விடுத்துள்ளார்.
 
ஜல்லிக்கட்டு தொடர்பாக ஜி.எஸ். மணி தனது மனுவில் தெரிவித்துள்ளதாவது :-
தமிழ்நாட்டில் பாரம்பரியமாக நடத்தப்பட்டு வந்த ஜல்லிக்கட்டு விளையாட்டுப் போட்டிகளில் காளைகளை ஈடுபடுத்த அனுமதி மறுத்து உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பால் அந்தப் போட்டிகளை நடத்த முடியாத நிலை உருவாகியுள்ளது. இதையடுத்து, காட்சிப்படுத்தும் விலங்குகள் பட்டியலில் உள்ள போதும், காளைகளை துன்புறுத்தாமல் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு, ரேக்ளா பந்தயம் ஆகியவற்றுக்கு அனுமதி அளித்து மத்திய அரசு அரசாணை வெளியிட்டது. ஆனால், அதற்கும் உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இது தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்குகள் மீதான விசாரணையில் எனது தரப்பு வாதங்களை முன்வைக்க அனுமதி அளிக்க விரும்புகிறேன்.
 
 
தேமுதிக சார்பில் தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டுள்ளேன். அதைத் தவிர இந்த மனு தாக்கலுக்கும் அரசியலுக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது. மூத்த வழக்குரைஞரை வைத்து ஒவ்வொரு விசாரணைக்கும் தலா ரூ.5 லட்சம் வரை செலவு செய்து வழக்காடுவதற்கும் எனக்கு நிதி வசதியில்லை. ஆனால், மக்களின் அடிப்படை உரிமை மறுக்கப்படும் இந்த விஷயத்தில் வாதிட எனக்கு உரிமை உள்ளது என்பதால் இந்த வழக்கில் என்னையும் மனுதாரராகச் சேர்த்து வாதத்தை முன்வைக்க அனுமதிக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
ஜல்லிக்கட்டுக்கு விதித்த தடை தொடர்பான தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனு, ஜல்லிக்கட்டு ஏற்பாட்டாளர்கள் தாக்கல் செய்துள்ள மனு ஆகியவற்றின் மீதான விசாரணை நீதிபதிகள் அறையில் 21-01-2016 நடைபெறும் என்று ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அப்போது ஜி.எஸ். மணியின் மனுவும் பரிசீலனைக்கு ஏற்கப்படலாம் .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஆன்றோர்கள் தேசமடி பாப்பா

ஆன்மீகத்தை கையில் எடுத்தாலும் அதன்மூலம் சமூகநீதியை பரப்பிய ஸ்ரீ ராமானுஜரை தன் மடியில் வைத்துக் கொண்டாடிய தேசமடி பாப்பா நம் பாரத கண்டம்.

பஞ்சாங்கம் பிப்.24 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

T20 WC2026: சூப்பர் 8 பிரிவில் சூப்பர் ஆட்டங்கள்

ஆண்கள் டி20 உலகக் கோப்பைப் போட்டி சூப்ப்ர் 8 ஆட்டங்கள் 23.02.2026

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: தமிழகம் முழுதும்!

தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் இறுதி வாக்களார் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.  எஸ்ஐஆர் பணி முடிந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும்

பஞ்சாங்கம் பிப்.23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

ஆன்றோர்கள் தேசமடி பாப்பா

ஆன்மீகத்தை கையில் எடுத்தாலும் அதன்மூலம் சமூகநீதியை பரப்பிய ஸ்ரீ ராமானுஜரை தன் மடியில் வைத்துக் கொண்டாடிய தேசமடி பாப்பா நம் பாரத கண்டம்.

பஞ்சாங்கம் பிப்.24 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

T20 WC2026: சூப்பர் 8 பிரிவில் சூப்பர் ஆட்டங்கள்

ஆண்கள் டி20 உலகக் கோப்பைப் போட்டி சூப்ப்ர் 8 ஆட்டங்கள் 23.02.2026

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: தமிழகம் முழுதும்!

தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் இறுதி வாக்களார் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.  எஸ்ஐஆர் பணி முடிந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும்

பஞ்சாங்கம் பிப்.23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

Entertainment News

Popular Categories