தமிழக ஆளுநர் உரை…! வழக்கம்போல் அவையிலிருந்து வெளியேறிய ஸ்டாலின்!

stalin out assembly2 - 2026

சென்னை: தமிழக சட்டமன்றம் இன்று காலை கூடியது. முதல் நிகழ்வாக, ஆளுநர் தனது உரையைத் துவங்கினார். அப்போது பல்வேறு விவகாரங்கள் குறித்துப் பேச வேண்டும் என்று கூறிய எதிர்க் கட்சித் தலைவர் ஸ்டாலின், தொடர்ந்து பேச முயன்றார். பின்னர் பேசுங்கள் என ஆளுநர் கூறினார். ஆனால், கஜா புயல் மறுசீரமைப்பு பணிகளுக்கு போதிய நிதியை மத்திய அரசு ஒதுக்கவில்லை எனக் கூறி, ஆளுநர் உரையை புறக்கணித்து வெளியேறுவதாகக் கூறி, வழக்கம்போல், சட்டமன்ற புறக்கணிப்பை ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் மேற்கொண்டனர்.

அவைக்கு வெளியில் செய்தியாளர்களிடம் இது குறித்துப் பேசிய ஸ்டாலின், தமிழக அரசு பல்வேறு விஷயங்களில் தோல்வியடைந்துள்ளது. கஜா புயலுக்கு மத்திய அரசு 1,500 கோடி ரூபாய் கூட வழங்கவில்லை. மேகதாதுவில் அணை கட்டுவதற்கு ஆய்வு மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனை திரும்ப பெற வேண்டும் என்று அழுத்தம் தர இயலாத நிலையில் மாநில அரசு உள்ளது.

ALSO READ:  தமிழக முதல் அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ஜோசப் விஜய்!

அரசு மருத்துவமனையில் எச்ஐவி ரத்தத்தை செலுத்தி மோசமான சூழ்நிலையை அரசு ஏற்படுத்தியது, விளைநிலங்கள் வழியாக உயர் மின்கோபுரம் அமைக்கக்கூடாது என வலியுறுத்தி போராட்டம் நடத்தப் படுகிறது. அவர்களுடன் பேச வக்கற்ற நிலையில் அரசு உள்ளது.

stalin int - 2026

குட்கா புகழ் விஜயபாஸ்கருக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அவரது வீட்டில் ரெய்டு நடந்துள்ளது. வருமான வரித்துறை விசாரணை நடந்துள்ளது. அவர் ராஜினாமா செய்திருக்க வேண்டும். ஆனால், பதவியில் நீடிப்பது வெட்கக்கேடானது.

முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் மீது ஊழல் புகார் போடப்படுகிறது. ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது என அமைச்சர் சண்முகம் பகிரங்கமாக பேட்டி கொடுத்துள்ளார். இதனால் தான், அவர் இறந்த உடன் ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை வேண்டும் என்றோம். அதனை தற்போது வலியறுத்தியுள்ளோம்.

அரசு எழுதி கொடுத்துள்ள பேப்பரை ஆளுநர் படிக்கிறார். இதனைக் கண்டித்து அவரது உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்துள்ளோம் என்றார் ஸ்டாலின்.

ALSO READ:  IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

Entertainment News

Popular Categories