December 7, 2025, 1:02 AM
25.6 C
Chennai

யாருக்காக… யாரைக் காப்பாற்ற… லண்டர் டாக்டரும் சுகாதாரச் செயலரும் முற்படுகிறார்கள்?!: ஹரி எம்.பி. பகீர் கேள்வி!

hari mp - 2025

திருத்தணியில் செய்தியாளர்களைச் சந்தித்தார் அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி. அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது…

திருவள்ளுர்: தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே ஆகியோர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் உள்ள நபர்கள்! இவர்கள் இருவரையும் தனி விசாரணை ஆணையம் அமைத்து விசாரிக்க வேண்டும் என்று சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் கூறியிருப்பதும் அதன் பின்னர் நடந்தவையும் பார்த்தால், ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பது உறுதி செய்யப்பட்டு வருகிறது

இதற்கு காரணம் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அவர் கொடுத்துள்ள பதில்தான். .

தமிழக அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவில்தான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் மேல் சிகிச்சைக்காக வெளிநாட்டிற்கு அழைத்து செல்லப்படவில்லை என்று கூறியுள்ளார் … இந்த பதிலை விசாரணையில் தெரிவித்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் எந்த ஒரு அடிப்படை ஆதாரமும் இன்றி அவர் இப்படிக் கூறியுள்ளார்!

மேலும் சந்தேகம் இருப்பதாக நேற்று சட்டமன்றஉறுப்பினர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமிழக சட்டப் பேரவை முன்பு செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருந்தோம்.

ஆனால் லண்டன் மருத்துவர் ஜெயலலிதா அவர்கள் வெளிநாட்டிற்கு சிகிச்சைக்கு வர விருப்பமில்லை என்று ஒரு வீடியோவை பதிவு செய்துள்ளார் இந்த வீடியோ பதிவு யாருடைய வலியுறுத்தலில் வெளிவந்துள்ளது?! அந்த மர்மமான நபர்கள் யார்? தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனையும் லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பிலோ ஆகியோர்கள் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இவர்களை தூண்டிவிடும் நபர்கள் யார்? இது யாருக்காக? யாரைக் காப்பாற்ற?

ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள சந்தேகங்களை தனி விசாரணை ஆணையம் அமைத்து.. லண்டன் மருத்துவரையும் தமிழக சுகாதாரத்துறை செயலாளரையும் விசாரிக்க வேண்டும் என்று அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி திருத்தணியில் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

Topics

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Entertainment News

Popular Categories