பொது நல மனு மீதான விசாரணையின் போது “பாராளுமன்றத்தில் இயற்றப்பட்ட உணவு பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த குஜராத் போன்ற மாநிலங்கள் மறுப்பது ஏன்?” என்றும், “இந்தியா முழுவதும் இந்த சட்டம் அமல்படுத்தும் போது குஜராத்தில் மட்டும் விதி விலக்கு என்று சொல்லப்பட்டிருக்கிறதா?” என்றும் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது. இது போல் “இந்திய குற்றவியல் சட்டம், இந்திய சிவில் சட்டம், சாட்சிகள் சட்டம் ஆகியனவற்றை நடைமுறைப் படுத்த மாட்டோம் என்று பிற மாநிலங்கள் சொன்னால் என்ன ஆவது ?” என்றும் உச்சநீதிமன்றம் கேட்டுள்ளது.

