December 7, 2025, 1:27 AM
25.6 C
Chennai

உறைந்த மாசடைந்த உணவில் வாழும் கொரோனா வைரஸ்: சீனா கிளப்பிய அதிர்ச்சி!

frozen-foods
frozen-foods

உறையச் செய்யப்பட்ட மாசடைந்த உணவில் வாழும் கொரோனா வைரஸ் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது, பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது

உறைந்த மாசுபடுத்தப்பட்ட உணவு தொகுப்பில் கொரோனா வைரஸ் வாழும் என்றும் தோற்று நோய் ஏற்படுத்தக்கூடும் என்றும் சீனாவின்   சி.டி.சி கூறுகிறது… மாசடைந்த உறைந்த உணவு பேக்கேஜ் மூலம் கொரோனா வைரஸ் உயிர் வாழும் என சீனாவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் 19 நாடுகளைச் சேர்ந்த 56 நிறுவனங்களில் இருந்த ஊழியர்கள் பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதனையடுத்து அந்நிறுவனங்களிலிருந்து உறைந்த உணவு இறக்குமதிக்கு சீனா தற்காலிகமாக தடை விதித்தது. 

அண்மையில், கிழக்கு சாண்டோங் மாகாணத்தின் முக்கிய நகரான கிங்டாவோவில் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் 8 நோயாளிகள் உட்பட 9 பேருக்கு, கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கிங்டாவோ நகரில் வசிக்கும் சுமார் ஒன்பது லட்சம் பேருக்கும், கொரோனா பரிசோதனை நடத்த சுகாதாரத்துறை உத்தரவிட்டது.

இதனிடையே புதிய தொற்றுக்கான காரணம் குறித்து சீன நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் ஆய்வு செய்து வந்தது. இந்த நிலையில், உறைந்திருக்கும் உணவின் மேற்புறத்தில் புதிய கொரோனா வைரஸ் உயிர் வாழ்வது கண்டறியப்பட்டது. இது உறைந்த உணவு வழியாக உயிர்ப்புடன் இருக்கும்  கொரோனா வைரஸ் நீண்ட தொலைவுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, பரவ வாய்ப்பு உண்டு  என்று அதிகாரபூர்வமாக ஒப்புக்கொள்ளப் பட்டுள்ளது. இவ்வாறு ஒப்புக்கொள்ளப்படுவது இதுவே முதல் முறை என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது  

உறைந்த உணவுத் தொகுப்பில் இருந்து எடுக்கப்பட்ட சில மாதிரிகளில் கொரோனா மரபணு தடயங்களை சீனாவின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் கண்டறிந்தது.  எனினும் இந்த மாதிரிகளில் காணப்படும் வைரஸின் அளவு மிகக் குறைவாக இருந்தது. 

செப்டம்பர் மாதம் கிங்டாவோவில் இரண்டு கப்பல் பணியாளர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்தப் பணியாளர்கள் உறைந்த உணவு பேக்கேஜை கையாண்டுள்ளனர்! எனினும் இவர்கள் உறைந்த உணவுத் தொகுப்பால், நேரடியாக பாதிக்கப்பட்டார்களா, அல்லது வழக்கமான கொரோனா தொற்றுக்கு உள்ளானார்களா என்பது குறித்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. எனினும் உறைந்த உணவு பேக்கேஜிங் கையாளும் தொழிலாளர்கள் கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்குமாறு சீன நோய்த் தடுப்பு மையம் அதன் இணையதளத்தில் வெளியிட்டுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளது. 

அதன்படி உறைந்த தயாரிப்புகளை கையாளும், செயலாக்கும் மற்றும் விற்பனை செய்யும் தொழிலாளர்கள் மாசுபடுத்தக்கூடிய தயாரிப்புகளுடன் நேரடி தோல் தொடர்பைத் தவிர்க்க வேண்டும் என்று அது அறிவுறுத்தியது.

கைகளை கழுவாமல் மாசுபடுத்தக்கூடிய வேலைநேர ஆடைகளைக் கழற்றுவதற்கு முன்பு ஊழியர்கள் வாய் அல்லது மூக்கைத் தொடக்கூடாது, தொடர்ந்து சோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அது தெரிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

Topics

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Entertainment News

Popular Categories