அகில இந்திய கூடைப்பந்து போட்டியில் பிரியங்கா மகள் அணி தோல்வி அடைந்தது இதில் தமிழ்நாடு அணி வெற்றி பெற்றது அகில இந்திய சப்–ஜூனியர் கூடைப்பந்து போட்டி புதுவையில் இன்று தொடங்கி வருகிற 8–ந் தேதிவரை நடைபெறுகிறது. இதில் இந்தியா முழுவதும் இருந்து 20 அணிகள் பங்கேற்கின்றன. நேற்றிரவு அரியானா அணியுடன் தமிழக அணி மோதியது. அதில் அரியானா அணியில் பிரியங்கா மகள் மிரயா வதேரா விளையாடினார். இந்தப் போட்டியில் தமிழக அணி வெற்றி பெற்றது

