கோவையில் இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை திறந்து வைத்து பேசிய பிரதமர் மோடி, வணக்கம் என்று தமிழில் பேச்சை துவக்கி, கோவை வந்ததில் மிகவும் மகிழ்ச்சியடைவதாக கூறினார்.
மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் கூட்டாட்சி என்பதே தமது அரசின் கொள்கை. ஒத்துழைப்புடன் கூட்டாட்சி என்பதற்கு ஏற்ப இ.எஸ்.ஐ மருத்துவமனை கட்டப்பட்டுள்ளதாக கூறினார்.
இ.எஸ்.ஐ.யில் உறுப்பினராக உள்ளவர்களின் பிள்ளைகளுக்கு கல்லூரியில் 26 சதவீத இடம் ஒதுக்கப்படுவதாக குறிப்பிட்டார்.
மேலும் இ.எஸ்.ஐ.யில் உள்ள 6 கோடி தொழிலாளர்களுக்கு தனி அடையாள எண் தரப்பட்டுள்ளதாக மோடி கூறினார். காந்தி கொள்கையின் அடிப்படையில் இ.எஸ்.ஐ திட்டம் செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார் குறிப்பிட்டார்.


