குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

1001763494 - 2026

சோழவந்தான் அருகே, ராயபுரத்தில் குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் 5000க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் தேக்கம்
ஏக்கருக்கு 30,000 முதல் 40,000 வரை நஷ்டம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக விவசாயிகள் குற்றச்சாட்டு கூறினர் .

மதுரை மாவட்டத்தின், சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட சோழவந்தான் வாடிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நெல் அறுவடை பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. அறுவடை செய்த நெல்களை பல இடங்களில் உள்ள அரசின் கொள்முதல் நிலையங்களில் குவித்து வைத்துள்ளனர்.


சில இடங்களில் மூடைகளாக பிடித்து கட்டி வைத்து தார்ப்பாய் போட்டு மூடி வைத்தும்
உள்ளனர் ஒரு சில பகுதிகளில் நெல்லை கொள்முதல் செய்யாமலும் சில பகுதிகளில் மூடைகளாக கட்டி வைக்கப்பட்ட நெல் மூட்டைகளை குடோன்களுக்கு அதிகாரிகள் கொண்டு செல்லாமல் இருப்பதால்,
மூடைகள் தேங்கியும் நெல் மணிகள் மலை போல் குவிந்தும் இருப்பதால் பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

ALSO READ:  சோழ சாம்ராஜ்யத்தின் வளமான வரலாறும், கலாசாரமும் பெருமிதம் ஏற்படுத்துகிறது: மனதின் குரலில் மோடி!


குறிப்பாக, சோழவந்தான் அருகே ராயபுரம் கிராமத்தில் ராயபுரம் ,ரிஷபம், திருமால் நத்தம், திருவாலவாயநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட ஏக்கரில் அறுவடை செய்த நெல் மணிகள் ராயபுரம் தேவாலயம் முன்பு குவித்து வைக்கப்பட்டுள்ளது.

மேலும் , குடோன்களுக்கு கொண்டு செல்வதற்காக சுமார் 5000க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் கட்டி அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. அதிகாரிகளின் அலட்சியத்தால் குடோன்களுக்கு கொண்டு செல்ல முடியாமல் காலதாமதம் ஏற்படுவதால் தற்போது விவசாயிகள் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து வருகின்றனர்.


குடோன்களுக்கு, கொண்டு செல்வதில் தாமதம் ஏற்படும் பட்சத்தில் பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக வேதனை தெரிவிக்கின்றனர். குறிப்பாக,
ராயபுரம் கிராமத்தின் மந்தை பகுதி சர்ச் பகுதி தெருக்களில் நெல்கள் குவித்து வைக்கப்பட்டும் நெல் மூட்டைகளாக அடுக்கி வைக்கப்பட்டும் இருப்பது விவசாயிகளை கடும் வேதனையில் ஆழ்த்தி உள்ளது .


இது குறித்து, விவசாயிகள் தரப்பில் கூறுகையில், வரிசைப்படி தான் வாகனங்களை அனுப்ப முடியும் என அதிகாரிகள் கூறுவதால் பல நாட்களாக நெல் மூட்டைகள் தேங்கி கிடக்கிறது.

ALSO READ:  குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!


இதனால், திடீர் மழை பெய்யும் பட்சத்தில் நெல் மூட்டைகள் அனைத்தும் மழையில் நனைந்து சேதம் அடையும் நிலைக்கு தள்ளப்படும் இதன் காரணமாக ஏக்கருக்கு 30,000 முதல் 40 ஆயிரம் வரை விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட வாய்ப்பு ஏற்படும்

விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு தேங்கியுள்ள நெல் மூட்டைகளை உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென,
இந்த பகுதி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

இதேபோன்று, சோழவந்தான்
அருகே முள்ளி பள்ளம், இரும்பாடி ,கருப்பட்டி, நாச்சிகுளம், கரட்டுப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலும் நெல் மூட்டைகள் குவியல்களாகவும் நெல் மூட்டைகளாகவும் கொள்முதல் நிலையங்களில் தேங்கிக் கிடப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர் .


தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும் வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 11 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

சாதனை நாயகர் பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து  வருகின்றனர்.

பஞ்சாங்கம் – ஜூன் 10 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

இந்தியா – ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட்முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியன்இந்திய அணி முதல்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 11 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

சாதனை நாயகர் பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து  வருகின்றனர்.

பஞ்சாங்கம் – ஜூன் 10 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

இந்தியா – ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட்முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியன்இந்திய அணி முதல்...

முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!

அனைவரின் நன்மைக்காகவும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்காகவும் பாடுபடுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்களே என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே ஒட்டுமொத்த நாடும் செழிப்படைந்து முழுமையான வளர்ச்சியை நோக்கி முன்னேற வேண்டுமானால்  ஆட்சி நிர்வாகம் சனாதன தர்மத்தின் அடிப்படையில் வழிநடத்தப்பட வேண்டும்.

பஞ்சாங்கம் ஜூன் 8 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!

அண்ணாமலையால் இளைய தலைமுறையினர் பலர் ஈர்க்கப்பட்டார்கள் என்பது உண்மை, ஆனால் பல தலைமுறைகளாக சித்தாந்தத்தால் பெரு வளர்ச்சி கண்ட கட்சி பாரதீய ஜனதா என்பதை மறந்துவிடக் கூடாது.

Entertainment News

Popular Categories