மத்தியில் மீண்டும் பாஜக., ஆட்சி! கருத்துக் கணிப்பில் தகவல்!

karnataka election modi - 2026
#image_title

மத்தியில் மீண்டும் பாஜக., ஆட்சியே அமையும், மோடியே பிரதமராக வருவார் என்று ஒரு கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்தியா டி.வி. மற்றும் சி.என்.எக்ஸ் டி.வி ஆகியவை இணைந்து நாடு முழுவதும் கருத்துக் கணிப்பு நடத்தின. அதன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. அந்த கருத்து கணிப்பில் கூறியிருப்பதாவது:-

நாடு முழுவதும் 543 மக்களவை தொகுதிகள் உள்ளன. தற்போது மக்களவையில் பா.ஜ.க.வுக்கு 303 எம்.பி.க்கள் உள்ளனர். வருகிற மக்களவை தேர்தலில் பா.ஜ.க.வின் பலம் குறையக்கூடும். அந்த கட்சி 290 மக்களவைத் தொகுதிகளை கைப்பற்றும். குறிப்பாக உத்தரபிரதேசத்தில் மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் பா.ஜனதா 73-ல் வெற்றி பெறும். குஜராத்தில் மொத்தம் உள்ள 26 தொகுதிகளையும் பா.ஜ.க. கைப்பற்றும்.

பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இணைந்து வருகிற நாடாளுமன்ற தேர்தலில் 318 தொகுதிகளை கைப்பற்றி 3-வது முறையாக மத்தியில் ஆட்சி அமைக்கும்.

ஐ.என்.டி.ஐ.ஏ., கூட்டணியின் பிரதான கட்சியான காங்கிரஸ் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் 66 தொகுதிகளை கைப்பற்றும். இந்த கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் திரிணாமுல் காங்கிரசுக்கு தற்போது 22 எம்.பி.க்கள் உள்ளனர். வருகிற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் 2 தொகுதிகளில் வெற்றி பெறும்.

ஐ.என்.டி.ஐ.ஏ., கூட்டணியில் இடம்பெற்றுள்ள தி.மு.க.-19, ராஷ்டீரிய ஜனதா தளம்-7, ஐக்கிய ஜனதா தளம்-7, சிவசேனா உத்தவ் தாக்கரே பிரிவு-11, தேசியவாத காங்கிரசின் சரத்பவார் பிரிவு-4, இடதுசாரி கட்சிகள்-8 உள்பட ஐ.என்.டி.ஐ.ஏ., கூட்டணி 175 தொகுதிகளைக் கைப்பற்றும்.

உத்தரபிரதேசத்தில் மொத்தம் உள்ள 8 தொகுதிகளில் பாரதிய ஜனதா கூட்டணி-73 ஐ.என்.டி.ஐ.ஏ., கூட்டணி-7 தொகுதிகளைக் கைப்பற்றும். பீகாரில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் தே.ஜ. கூட்டணி-24, ஐ.என்.டி.ஐ.ஏ., கூட்டணி-16 தொகுதிகளை கைப்பற்றும்.

மகாராஷ்டிராவில் மொத்தம் உள்ள 48 தொகுதிகளில் தே.ஜ. கூட்டணி-24, ஐ.என்.டி.ஐ.ஏ., கூட்டணி-24-ல் வெற்றி பெறும்.

தமிழகத்தில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் தே.ஜ. கூட்டணி-9, ஐ.என்.டி.ஐ.ஏ., கூட்டணி-30ல் வெற்றி பெறும். மேற்கு வங்காளத்தில் மொத்தம் உள்ள 42 தொகுதிகளில் தே.ஜ. கூட்டணி-12, ஐ.என்.டி.ஐ.ஏ., கூட்டணி-30ல் வெற்றி பெறும்.

கர்நாடகாவில் மொத்தம் உள்ள 28 தொகுதிகளில் பா.ஜனதா கூடடணி-20, ஐ.என்.டி.ஐ.ஏ., கூட்டணி-7ஐ கைப்பற்றும். குஜராத்தில் மொத்தம் உள்ள 26 தொகுதிகளிலும் தே.ஜ. கூட்டணியே வெற்றி பெறும். ஐ.என்.டி.ஐ.ஏ., கூட்டணிக்கு ஒரு இடம் கூட கிடைக்காது.

கேரளாவில் மொத்தம் உள்ள 20 தொகுதிகளையும் ஐ.என்.டி.ஐ.ஏ., கூட்டணியே கைப்பற்றும். தே.ஜ. கூட்டணிக்கு ஒரு இடம் கூட கிடைக்காது. ராஜஸ்தானில் மெத்தம் உள்ள 25 தொகுதிகளில் தே.ஜ. கூட்டணி-21, ஐ.என்.டி.ஐ.ஏ., கூட்டணி-4ல் வெற்றி பெறும்.

ஆந்திராவில் மொத்தம் உள்ள 25 தொகுதிகளில் தே.ஜ. கூட்டணி, ஐ.என்.டி.ஐ.ஏ., கூட்டணிக்கு ஒரு இடம் கூட கிடைக்காது. அந்த மாநிலத்தில் ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் 18, தெலுங்கு தேசம் 7 தொகுதிகளைக் கைப்பற்றும்.

ஒடிசாவில் மொத்தம் உள்ள 21 தொகுதிகளில் தே.ஜ. கூட்டணி-8, பிஜு ஜனதா தளம் 13-ல் வெற்றி பெறும். ஐ.என்.டி.ஐ.ஏ., கூட்டணிக்கு ஒரு இடம் கூட கிடைக்காது.

மத்திய பிரதேசத்தில் மொத்தம் உள்ள 29 தொகுதிகளில் தே.ஜ. கூட்டணி-24, ஐ.என்.டி.ஐ.ஏ., கூட்டணி-5ஐ கைப்பற்றும்.

தெலுங்கானாவில் மொத்தம் உள்ள 17 தொகுதிகளில் தே.ஜ. கூட்டணி-6, ஐ.என்.டி.ஐ.ஏ., கூட்டணி-2, பாரத் ராஷ்டிரிய சமிதி-8ல் வெற்றி பெறும். அசாமில் மொத்தம் உள்ள 14 தொகுதிகளில் தே.ஜ. கூட்டணி-12, ஐ.என்.டி.ஐ.ஏ., கூட்டணி-1ல் வெற்றி பெறும்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள 11 தொகுதிகளில் தே.ஜ. கூட்டணி-7, ஐ.என்.டி.ஐ.ஏ., கூட்டணி-4 தொகுதிகளை கைப்பற்றும். ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 14 தொகுதிகளில் தே.ஜ. கூட்டணி-13, ஐ.என்.டி.ஐ.ஏ., கூட்டணி ஒரு இடத்திலும் வெற்றிபெறும். அரியானாவில் மொத்தம் உள்ள 10 தொகுதிகளில் தே.ஜ. கூட்டணி-8, ஐ.என்.டி.ஐ.ஏ., கூட்டணி 2 இடங்களை கைப்பற்றும்.

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 13 தொகுதிகளையும் ஐ.என்.டி.ஐ.ஏ., கூட்டணியே கைப்பற்றும். டெல்லியில் மொத்தம் உள்ள 7 தொகுதிகளில் தே.ஜ. கூட்டணி-5, ஐ.என்.டி.ஐ.ஏ., கூட்டணி-2ல் வெற்றி பெறும்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் மொத்தம் 5 தொகுதிகளையும் தே.ஜ. கூட்டணி கைப்பற்றும். காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்களில் தே.ஜ. கூட்டணி-3, ஐ.என்.டி.ஐ.ஏ., கூட்டணி-2ல் வெற்றி பெறும்.

இமாச்சல பிரதேசத்தில் மொத்தம் உள்ள 4 தொகுதிகளில் தே.ஜ. கூட்டணி-3, ஐ.என்.டி.ஐ.ஏ., கூட்டணி ஒரு இடத்திலும் வெற்றிபெறும். மணிப்பூரில் மொத்தம் உள்ள 2 தொகுதிகளையும் ஐ.என்.டி.ஐ.ஏ., கூட்டணி கைப்பற்றும். இதர வடகிழக்கு மாநிலங்களில் 9 தொகுதிகளிலும் தே.ஜ. கூட்டணி வெற்றி பெறும். கோவாவில் மொத்தம் உள்ள 2 தொகுதிகளையும் தே.ஜ. கூட்டணி கைப்பற்றும்.

இவ்வாறு கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories