விருதுநகர் – செங்கோட்டை ரயில் பாதை மின்மயமாக்கும் பணி எப்போது?

thenmalai-rail

செங்கோட்டை: நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் இருந்து விருதுநகர் வரையிலான பாதையில் மின்மயமாக்கும் பணிகள் எப்போது நடைபெறும் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு இந்திய ரயில்வே மின்மயமாக்கல் துறை அதிகாரிகள் பதில் அளித்துள்ளனர்.

இது குறித்து  கடந்த 2018 டிச.12அன்று செங்கோட்டை ரயில் பயணிகள் நலச்சங்க செயலாளரும் தெற்கு ரயில்வே மதுரை கோட்ட ரயில் உபயோகிப்போர் கலந்தாய்வுக்குழு உறுப்பினருமான பொறியாளர் கே.எச்.கிருஷ்ணன் பிரயாக்ராஜில் (அலகாபாத்) உள்ள இந்திய ரயில்வேயின் மின்மயமாக்கல் மத்திய அலுவலகத்துக்கு செங்கோட்டை — விருதுநகர், தென்காசி திருநெல்வேலி, கொல்லம் புனலூர், புனலூர் செங்கோட்டை ரயில் வழித்தடங்களின் மின்மயமாக்கும் பணி குறித்து கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு 7 பிப்ரவரி 2019 ல் அலகாபாத் மத்திய மின்மயமாக்கல் அலுவலக அதிகாரி பதில் அனுப்பியுள்ளார். அதில்,  செங்கோட்டை – விருதுநகர் & தென்காசி — திருநெல்வேலி தடங்கள் — இவற்றில் சர்வே, முழு திட்ட அறிக்கை, வரைபடங்கள் தயாரிக்க காண்ட்ராக்ட் விடப்பட்டு விட்டது. பணிகள் தொடங்கி உள்ளன.

மேலும் கொல்லம் புனலூர் பாதை மின்மயமாக்கலுக்கு இறுதி நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டு விரைவில் உறுதி செய்யப்படும். புனலூர் செங்கோட்டை வழித் தட மின்மயமாக்கல் தெற்கு ரயில்வே வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.. என்று குறிப்பிடப் பட்டிருந்தது.

ALSO READ:  ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

அதிகாரிகளின் இந்த பதிலுக்காக, செங்கோட்டை ரயில் பயணிகள் நலச்சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் மத்திய ரயில்வே மின்மயமாக்கல் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பினர்.

முன்னதாக வியாழன் அன்று செங்கோட்டை அருகே உள்ள கேரள மாநிலம் தென்மலை ரயில் நிலையம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அகல ரயில் பாதை அமைக்கப்பட்டு உள்ள நிலையில் நிறுத்தப்பட்டுள்ள கொல்லம்- சென்னை, கொல்லம்- செங்கோட்டை, கொல்லம்- நாகூர் ஆகிய ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும்; குருவாயூர்- புனலூர் ரயிலை செங்கோட்டை வரை நீட்டிக்க வேண்டும், கொல்லம்- நெல்லை இடையே கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

முன்னாள் எம்பி பாலகோபால் தலைமை தாங்க புனலூர் நகரசபை தலைவர் ராஜகோபால் தென்மலை பஞ்சாயத்து தலைவர் சைலஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

ALSO READ:  டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.

உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

உணவுப்பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள் உங்களை வணங்குகிறேன்-சம்பா மிளகாய் மதிப்புக்கு கூட்டப்பட்ட உற்பத்தி நிறுவனமான குளோபல் சில்லி அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை திறந்து வைத்து

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.

உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

உணவுப்பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள் உங்களை வணங்குகிறேன்-சம்பா மிளகாய் மதிப்புக்கு கூட்டப்பட்ட உற்பத்தி நிறுவனமான குளோபல் சில்லி அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை திறந்து வைத்து

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

Entertainment News

Popular Categories