திருமா..! நேற்று ‘அப்செட்’… இன்று ‘ஆப்செண்ட்’… நாளை ‘சரண்டர்’!

thirumava - 2026இன்று திமுக., தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்துக்கு கூட்டணிப் பேச்சுவார்த்தைக்காக வருவார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், இன்று வராமல் ஆப்செண்ட் ஆன திருமா, நாளை பங்கேற்கவுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, தாம் கௌரவத்திற்காக என்றில்லாமல் கொள்கை அடிப்படையில் கூட்டணி குறித்த முடிவை எடுத்திருப்பதாகக் குறிப்பிட்டார் திருமாவளவன்..

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட திமுக., தரப்பு கூட்டணிப் பேச்சில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. முதலில் தனது கூட்டணிக் கட்சியான காங்கிரஸுக்கு 10 தொகுதிகளை ஒதுக்கிக் கொடுத்தது. தொடர்ந்து முஸ்லிம் லீக்குக்கு ஒரு தொகுதி கொடுத்தது. அடுத்து கொமதேக., ஈஸ்வரனுக்கு ஒரு தொகுதி கொடுத்துள்ளது. அடுத்து, தோழமைக் கட்சிகளான மதிமுக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா 2 தொகுதிகள் கேட்கும் நிலையில், இவர்களுக்கு தலா ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்க முடியும் என்று திமுக., தரப்பு கறார் காட்டி வருகிறது.

இந்நிலையில், நேற்று மதிமுக., விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினருடன் கூட்டணிப் பேச்சு தொடரும் என்று கூறப் பட்ட நிலையில், அவர்களுக்கான அழைப்பு திடீரென ரத்து செய்யப் பட்டு, ஐஜேகே பாரிவேந்தர் அண்ணா அறிவாலயம் வந்தார். அவர் கூட்டணிப் பேச்சுவார்த்தைக்காக வந்திருப்பதாக ஐ.ஜே.கே. பாரிவேந்தருக்குச் சொந்தமான புதிய தலைமுறை தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது. அதற்கு ஏற்றார்ப் போல், பார்வேந்தர், கட்சியினர் சிலருடனும், தன் மகனுடனும் வந்திருந்தார். ஆனால், இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவில் வெளியில் வந்த பாரிவேந்தர், திமுக.,வுக்கு தமது ஆதரவைத் தெரிவிக்கவே வந்ததாகக் கூறினார்.


[su_posts template=”templates/teaser-loop.php” posts_per_page=”3″ tax_term=”35″ order=”desc”]

ALSO READ:  பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைத் தவிர்க்க மத்திய அரசு வரி குறைப்பு!

இந்நிலையில், நேற்று நடைபெறாது போன விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக.,வினர் உடனான பேச்சுவார்த்தையை இன்று காலை பத்தரைக்கு வைத்துக் கொள்வதாகக் கூறி, திருமாவளவனுக்கு அழைப்பு விடுக்கப் பட்டது.

இதனால் திருமா., இன்று இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு ஏற்றார்ப்போல், அண்ணா அறிவாலயம் வந்தார் அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்! அவர், துரைமுருகன், எ..வவேலு. ஆராசா பொன்முடி ஆர் எஸ் பாரதி உள்ளிட்ட திமுக கூட்டணிப் பேச்சுவார்த்தை மற்றும் தொகுதிப் பங்கீட்டுக் குழுவுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்தக் கூட்டத்தில், கூட்டணிக் கட்சிகளுக்கு எவ்வளவு தொகுதி ஒதுக்க முடியும்? திமுக எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது ? என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாம்.

எனவே, இன்று திமுக-விடுதலை சிறுத்தைகள் இடையே தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப் படும் என்றும் ஒப்பந்தத்தில் அவர்கள் கையெழுத்திட இருப்பதாகவும் கூறப் பட்டது. எனவே திருமாவளவன் இன்று காலை 11 மணிக்கு அண்ணா அறிவாலயம் வருவதாகக் கூறப்பட்டது. ஆனால் அவர் வரவில்லை. இதனால் ஏமாற்றமே நிலவியது.

ALSO READ:  பிரசாரத்தில் இருந்த திமுக., வேட்பாளர்; வீட்டில் 122 பவுன் நகை கொள்ளை!

இது குறித்து தகவல் தெரிவித்த தொல்.திருமாவளவன், தனக்கு வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டியிருந்தால் இன்று தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் பங்கேற்க முடியவில்லை!, நாளை கலந்து கொள்கிறேன் என்று கூறினார்.

மேலும், இன்று தொகுதிப் பங்கீடு குறித்துப் பேசும் முன்னதாக, தமது கட்சியின் சமூக வலைத்தள குழுவினரிடம் உரையாற்றிய திருமாவளன், கெரளவத்திற்காக என்றில்லாமல், கொள்கை அடிப்படையில் கூட்டணி குறித்து சில முடிவுகளை எடுத்துள்ளதாகக் கூறினார். மேலும், தமது முடிவினை பின்னடைவாகக் கருதக்கூடாது என்றும் தனது கட்சித் தொண்டர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.

காரணம், தமது கட்சிக்கு இரு தொகுதிகள் கேட்டு வந்த நிலையில், ஒரு தொகுதி தான் ஒதுக்க முடியும் என்றும், அதிலும் உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்றும் திமுக, தரப்பு வலியுறுத்தியதை திருமா தரப்பு ஏற்கவில்லை! ஆனால் திமுக., விடாப்பிடியாக இருப்பதால், இதுவரை மல்லுக்கட்டி, முரண்டு பிடித்து வந்த தொல்.திருமாவளவன் வேறு வழியிலாமல் திமுக.,வில் சரண்டர் ஆகிறார் என்று அவரது நடவடிக்கைகள் வெளிப்படுத்தியுள்ளன.

ALSO READ:  தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories