சட்டையை கிழித்துவிட்டு போட்டோ எடுக்க வா வா என்று கூப்பிடும் கட்சி அல்ல தேமுதிக!

Premalatha Vijayakanth - 2026

கிழியாத சட்டையை கிழித்துவிட்டு போட்டோ எடுக்க வா , வா என்று கூப்பிடும் கட்சி அல்ல தேமுதிக என்று கூறினார் பிரேமலதா விஜயகாந்த்!

தேமுதிக பொருளாளர் பிரேமலதா செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.  கூட்டணி இன்னும் முடிவாகவில்லை! இரண்டொரு நாளில் கூட்டணி குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும்! என்று கூறினார் பிரேமலதா.

செய்தியாளர்கள்-பிரேமலதா சந்திப்பில், செய்தியாளர்களை ஒருமையில் பேசியதால்  பரபரப்பு ஏற்பட்டது. நீ, வா, போ என அநாகரீகமாக அவர் பேசியதாக, பிரேமலதாவுடன் செய்தியாளர்கள் மோதலில் ஈடுபட்டனர்.

தனிப்பட்ட அரசியல் ஆதாயத்திற்காக தேமுதிக குறித்து துரைமுருகன் உளறுகிறார் என்றார் பிரேமலதா!

எப்போது வேண்டுமானாலும் விளக்கம் தருவோம், நீங்கள் வாசலில் உட்கார்ந்து இருப்பீர்கள் என்பதற்காக நான் விளக்கம் தரமுடியாது என்று கூறினார்.

37 எம்பிக்களை ஜெயலலிதா வென்றும் தமிழகத்திற்கு எந்த நலனும் கிடைக்கவில்லை; இதுவே  அவர் இரு தேசியக் கட்சிகளில் ஒன்றுடன் கூட்டணி வைத்திருந்தால், தமிழகத்துக்கு நல்லது நிறையக் கிடைத்திருக்கும். எனவே தேமுதிக., இரு தேசியக் கட்சிகளுடன் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவே விரும்புகிறது. சட்டமன்றத் தேர்தலாக இருந்தால் முதல்வர் குறித்துப்பேசலாம்.

முதலில் பாமக.,வை கூப்பிட்டு கையெழுத்து போட்டதுதான் பிரச்னைக்குக் காரணம். கடந்த முறை  தேஜ.,கூட்டணியின்போது எல்லாரையும் அமரவைத்து பேசி ஒரு முடிவுக்கு வந்தார்கள். ஆனால் இந்த முறை அவ்வாறு செய்ய வில்லை என்பதுதான் பிரச்னைக்கு காரணமே தவிர வேறு எதுவும் இல்லை! என்றார் பிரேமலதா.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

Topics

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

Entertainment News

Popular Categories