December 5, 2025, 9:27 PM
26.6 C
Chennai

ஐபிஎல்.,12 கோலாகல ஆரம்பம்! முதல் போட்டியில் சென்னை அசத்தல் வெற்றி!

CSK - 2025

சென்னை, பெங்களூரு அணிகள் மோதிய 12ஆவது ஐபிஎல் தொடரின் முதல் போட்டி இன்று இரவு நடைபெற்றது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்கள் உற்சாகத்துக்கு இடையில் நடைபெற்ற போட்டியில் சென்னை அணி அசத்தல் வெற்றி பெற்றது.

12ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கோலாகலமாக தொடங்கியது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை எதிர்கொண்டது.

மகேந்திரசிங் தோனி தலைமையிலான அணியும், விராட் கோலி தலைமையிலான அணியும் மோதிய முதல் போட்டி என்பதால், ஐ.பி.எல். தொடக்கமே அட்டகாசமாக அமைந்தது.

இந்தப் போட்டியைக் காண பிற்பகல் முதலே மைதானத்திற்கு ரசிகர்கள் வரத் தொடங்கி விட்டனர். இதை ஒட்டி, ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. 5.15 மணி முதல் ரசிகர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

தீவிர சோதனைகளுக்குப் பின்னரே அவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இந்த மைதானத்தில் கடைசியாக நடந்த 13 போட்டிகளில் சென்னை அணி 12இல் வென்றுள்ளது. பெங்களூருவுக்கு எதிராக இங்கு நடந்த போட்டிகளிலும் 85 விழுக்காடு வெற்றியை சென்னை அணி பதிவு செய்துள்ளது. இதனால் இன்றைய போட்டியை வெற்றிக் கணக்குடன் சென்னை அணி தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. அதை சென்னை அணி நிறைவேற்றியது.

புல்வாமா தாக்குதல் காரணமாக வழக்கமாக நடக்கும் தொடக்க நிகழ்ச்சி இந்த முறை நடைபெறாது என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. எனவே, தொடக்க நிகழ்ச்சிக்கு செலவாகும் தொகை, புல்வாமா தாக்குதலில் உயிர் தியாகம் செய்த வீரர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் எனக் கூறப்பட்டது. அதன்படி போட்டி தொடங்கும் முன் இராணுவ அதிகாரிகளிடம் அத்தொகை வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியை அடுத்து முதல் போட்டி தொடங்கியது. சென்னை அணி டாஸ் வென்று பந்து வீசத் தீர்மானித்தது.

இதை அடுத்து பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்தது. துவக்க வீரராகக் களம் கண்ட விராட் கோலி, பார்திவ் படேல் ஜோடியை ஹர்பஜன் சிங் பிரித்தார். விராட் கோலி 12 பந்துகள் எதிர்கொண்டு 6ரன் எடுத்திருந்த நிலையில் ஹர்பஜன் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார். முதல் மூன்று விக்கெட்டை ஹர்பஜன் சிங் வீழ்த்தினார். அதில் இருந்து அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் சரிந்தன.

பார்த்திவ் படேல் மட்டுமே 35 பந்துகளில் 2 பவுண்டரியுடன் 26 ரன் குவித்தார். மற்ற வீரர்கள் எவருமே ஒற்றை இலக்கத்தைத் தாண்டவில்லை.

சென்னை அணி தரப்பில் 4 ஓவர் வீசிய ஹர்பஜன் 3 விக்கெட் வீழ்த்தினார். இம்ரான் தஹிர் 3, ஜடேஜா 2, ப்ராவோ 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

இதை அடுத்து பெங்களூர் அணி 17.1 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 70 ரன் எடுத்தது. 71 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களம் இறங்கிய சென்னை அணி, தொடக்கம் முதலே நிதானத்துடன் விளையாடியது.

சென்னை அணியில் துவக்க வீரர் ஷேன் வாட்ஸன் 10 பந்துகளை எதிர்கொண்டு ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார். தொடர்ந்து சுரேஷ் ரெய்னா 21 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 19 ரன் எடுத்தார். அம்பத்தி ராயுடு 42 பந்துகளில் 2 பவுண்டரி 1 சிக்ஸருடன் 28 ரன் எடுத்தார். ஜடேஜா ஆட்டம் இழக்காமல் 6 ரன்னும் கேதர் ஜாதவ் ஆட்டம் இழக்காமல் 13 ரன்னும் எடுத்தனர். இதை அடுத்து, சென்னை அணி 17.4 ஓவரில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories