ஐபிஎல்.,12 கோலாகல ஆரம்பம்! முதல் போட்டியில் சென்னை அசத்தல் வெற்றி!

CSK - 2026

சென்னை, பெங்களூரு அணிகள் மோதிய 12ஆவது ஐபிஎல் தொடரின் முதல் போட்டி இன்று இரவு நடைபெற்றது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்கள் உற்சாகத்துக்கு இடையில் நடைபெற்ற போட்டியில் சென்னை அணி அசத்தல் வெற்றி பெற்றது.

12ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கோலாகலமாக தொடங்கியது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை எதிர்கொண்டது.

மகேந்திரசிங் தோனி தலைமையிலான அணியும், விராட் கோலி தலைமையிலான அணியும் மோதிய முதல் போட்டி என்பதால், ஐ.பி.எல். தொடக்கமே அட்டகாசமாக அமைந்தது.

இந்தப் போட்டியைக் காண பிற்பகல் முதலே மைதானத்திற்கு ரசிகர்கள் வரத் தொடங்கி விட்டனர். இதை ஒட்டி, ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. 5.15 மணி முதல் ரசிகர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

தீவிர சோதனைகளுக்குப் பின்னரே அவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இந்த மைதானத்தில் கடைசியாக நடந்த 13 போட்டிகளில் சென்னை அணி 12இல் வென்றுள்ளது. பெங்களூருவுக்கு எதிராக இங்கு நடந்த போட்டிகளிலும் 85 விழுக்காடு வெற்றியை சென்னை அணி பதிவு செய்துள்ளது. இதனால் இன்றைய போட்டியை வெற்றிக் கணக்குடன் சென்னை அணி தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. அதை சென்னை அணி நிறைவேற்றியது.

புல்வாமா தாக்குதல் காரணமாக வழக்கமாக நடக்கும் தொடக்க நிகழ்ச்சி இந்த முறை நடைபெறாது என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. எனவே, தொடக்க நிகழ்ச்சிக்கு செலவாகும் தொகை, புல்வாமா தாக்குதலில் உயிர் தியாகம் செய்த வீரர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் எனக் கூறப்பட்டது. அதன்படி போட்டி தொடங்கும் முன் இராணுவ அதிகாரிகளிடம் அத்தொகை வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியை அடுத்து முதல் போட்டி தொடங்கியது. சென்னை அணி டாஸ் வென்று பந்து வீசத் தீர்மானித்தது.

இதை அடுத்து பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்தது. துவக்க வீரராகக் களம் கண்ட விராட் கோலி, பார்திவ் படேல் ஜோடியை ஹர்பஜன் சிங் பிரித்தார். விராட் கோலி 12 பந்துகள் எதிர்கொண்டு 6ரன் எடுத்திருந்த நிலையில் ஹர்பஜன் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார். முதல் மூன்று விக்கெட்டை ஹர்பஜன் சிங் வீழ்த்தினார். அதில் இருந்து அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் சரிந்தன.

பார்த்திவ் படேல் மட்டுமே 35 பந்துகளில் 2 பவுண்டரியுடன் 26 ரன் குவித்தார். மற்ற வீரர்கள் எவருமே ஒற்றை இலக்கத்தைத் தாண்டவில்லை.

சென்னை அணி தரப்பில் 4 ஓவர் வீசிய ஹர்பஜன் 3 விக்கெட் வீழ்த்தினார். இம்ரான் தஹிர் 3, ஜடேஜா 2, ப்ராவோ 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

இதை அடுத்து பெங்களூர் அணி 17.1 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 70 ரன் எடுத்தது. 71 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களம் இறங்கிய சென்னை அணி, தொடக்கம் முதலே நிதானத்துடன் விளையாடியது.

சென்னை அணியில் துவக்க வீரர் ஷேன் வாட்ஸன் 10 பந்துகளை எதிர்கொண்டு ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார். தொடர்ந்து சுரேஷ் ரெய்னா 21 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 19 ரன் எடுத்தார். அம்பத்தி ராயுடு 42 பந்துகளில் 2 பவுண்டரி 1 சிக்ஸருடன் 28 ரன் எடுத்தார். ஜடேஜா ஆட்டம் இழக்காமல் 6 ரன்னும் கேதர் ஜாதவ் ஆட்டம் இழக்காமல் 13 ரன்னும் எடுத்தனர். இதை அடுத்து, சென்னை அணி 17.4 ஓவரில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories