February 22, 2026, 12:51 AM
26.7 C
Chennai

“நான் கலைஞரின் மகன்…” புளித்த வாசகத்தைத் தொடர்ந்து… ‘உதய’மான “நான் கலைஞரின் பேரன்”!

Udhayanidhi Stalin - 2026

என் மீது எத்தனை வழக்குகள் வேண்டுமானாலும் போடுங்கள்; அதை சந்திக்கத் தயார். ஏனெனில் நான் கலைஞரின் பேரன்” என்று கூறினார் உதயநிதி ஸ்டாலின்!

ஏற்கெனவே திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின், பல மேடைகளில் தான் வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று பேசிட மாட்டேன். எதையும் ஆதாரத்தோடுதான் பேசுவேன். காரணம் நான் கலைஞரின் மகன் என்று பேசி வந்தார். பேசி வருகிறார்.

அவரது பேச்சுக்கு, வாரிசு அரசியல் என்று பலத்த விமர்சனங்கள் பொதுவெளியில் முன்வைக்கப் பட்டு வருகின்றன. திமுக.,வில் தலைமைப் பொறுப்புக்கு வேறு யாருமே இல்லையா?! வாரிசு அரசியல் கோலோச்சுகிறது திமுக.வில்! வலியத் திணிக்கப் பட்ட தலைமை என்று விமர்சனங்கள் முன்வைக்கப் பட்டு வரும் நிலையில், அடுத்த தலைமைக்கு அடிபோடும் விதமாக… ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் களத்தில் இறக்கி விடப் பட்டுள்ளார்.

தற்போது, அவர் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். தன் தந்தை ஸ்டாலின் பாணியில், அவரும் இப்போது “நான் கலைஞரின் பேரன்” என்று சொல்லிக் கொண்டு பிரசாரம் செய்வது வாரிசு அரசியலை அப்பட்டமாகக் காட்டியிருக்கிறது.

udayanidhi grandma - 2026
அடேய்… காசு கொடுத்து கூப்பிட்டு வர்ற வேகத்தில பாட்டி சேலையைக் கூட மாத்தாம கூட்டிட்டு வந்துடானுக அப்பரன்டீஸ்களா……!

சேலம் மாவட்டம் ஓமலூரில் திமுக., வேட்பாளரை ஆதரித்துப் பேசிய உதயநிதி ஸ்டாலின், பொள்ளாச்சி விவகாரத்தில் தொடர்புடைய நபர்களின் பெயர்களை வெளியிட்டதற்காக என் மீது வழக்கு தொடர்ந்தாலும் அதுகுறித்து எனக்குக் கவலையில்லை என்று கூறினார்.

மேலும், பெண்களுக்குப் பாதுகாப்பு இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பிய போது, கூட்டத்தில் சிலர் ‘இல்லை’ என்று குரல் கொடுத்தனர். ”பொள்ளாச்சி சம்பவத்தை மறக்க முடியுமா?” என்று அவர் கேட்ட போது, ‘மறக்க முடியாது’ என்று சிலர் பதிலளித்தனர்.

”துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனின் மகன் பிரவீன் அதிமுகவைச் சேர்ந்தவர். இதைச் சொன்னதற்கு அவர்கள் என் மீது வழக்கு போடலாம். எத்தனை வழக்கு வேண்டுமானாலும் போடுங்கள்; அதைச் சந்திக்க நான் தயார். ஏனெனில் நான் கலைஞரின் பேரன்… என்று பேசியபோது, ஸ்டாலின் வழியை உதயநிதியும் பின்பற்றுகிறார் என்றனர் கூட்டத்தில் இருந்தவர்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Entertainment News

Popular Categories