காங்கிரஸுடன் இணைந்து இனி போராட்டம் இல்லை: மார்க்சிஸ்ட்

Published:

விசாகப் பட்டினம்: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டம் நடைபெற்றது. மாநாட்டின் நிறைவில் வெளியிடப்பட்ட அறிக்கையில், பிரதமர் நரேந்திர மோடி அரசின் கொள்கைகளுக்கும், ஹிந்துத்துவா அமைப்புகளின் மதவாதத் திட்டங்களுக்கும் எதிரான போராட்டத்தை வலுப்படுத்த வேண்டியது உடனடித் தேவை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபடுவதில்லை என முடிவெடுக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related articles

Recent articles

spot_img