காஷ்மீர் பிரிவினைவாதிகள் கைதுக்கு பாகிஸ்தான் கண்டனம்

Published:

இஸ்லாமாபாத்; பாகிஸ்தானில் பிரிவினைவாதத் தலைவர்கள் சையத் அலி ஷா கிலானி உள்ளிட்டோர் கைது செய்யபப்பட்டதற்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது. காஷ்மீரில் சனிக்கிழமை ஒரு நாள் முழுஅடைப்பு போராட்டம் நடந்தபோது பத்காம் மாவட்டத்தில் நடந்த போலீஸாரின் துப்பாக்கிச் சூட்டில் 16 வயது சிறுவன் ஒருவன் கொல்லப்பட்டான். பிரிவினைவாத தலைவர் சையத் அலி ஷா கிலானி உள்ளிட்டோர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். இந்தச் சம்பவத்துக்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் தஸ்னிம் அஸ்லாம் வெளியிட்ட அறிக்கையில், காஷ்மீரில் அதிகரித்து வரும் மனிதஉரிமை மீறல்களை பாகிஸ்தான் கவனித்து வருகிறது. ஆயுதம் இன்றி அமைதியான முறையில் போராடி வருபவர்கள் மீது இந்திய பாதுகாப்புப் படை தாக்குதல் நடத்தியதில் 2 காஷ்மீர் இளைஞர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இது மிகவும் கண்டிக்கத்தக்கது என்று கூறியுள்ளார்.

Related articles

Recent articles

spot_img