கழட்டுறதுன்னு முடிவாகிப் போச்சு; தாலிக்கு பதில் கருப்புச் சட்டை: பொன்.ராதாகிருஷ்ணண்

Published:

pon Radha photoசென்னை: நீங்கள் தாலியைக் கழட்டினால், நாங்கள் உங்கள் கருப்புச் சட்டையைக் கழற்றுவோம் என்று தி.க.வுக்கு பாஜக பதிலடிகொடுத்துள்ளது, முன்னதாக தாலியறுக்கும் போராட்டத்தை அறிவித்து, தமிழர் ஆண்டுப் பிறப்பான சித்திரைத் திருநாளில் தி.க. வினர் அறிவித்து, அதனை அவரசரம் அவசரமாக காலையில் மேற்கொண்டனர். இந்நிலையில் இந்தப் போராட்டத்தைக் கைவிடாவிட்டால், திராவிடர் கழகத்தைக் கண்டித்து மாநிலம் முழுவதும் கருஞ்சட்டை அகற்றும் போராட்டம் வெடிக்கும் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் இன்றூ செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பெண்கள் அணியும் தாலி என்பது தமிழ்க் கலாச்சாரத்தின் அடையாளம். ஒரு குறிப்பிட்ட மதச் சின்னம் அல்ல. எல்லா மதத்திலும் தாலி அணியும் வழக்கம் உள்ளது. எந்தக் குடும்பப் பெண்ணும் தாலியை அடிமைத்தனமாக நினைப்பதில்லை. அன்பின் அடையாளமாக, புனித அடையாளமாகத்தான் கருதி வருகிறார்கள். கலாச்சாரத்தின் காவலர்கள் என்று பேசிக் கொண்டு தாலியை அகற்ற வேண்டும் என்று பேசியதன் மூலம் தமிழ் கலாச்சாரத்துக்கு எதிரானவர்கள் என்பதை திகவினர் நிரூபித்த்ருக்கிறார்கள். திகவினரின் இந்தக் கலாச்சாரத் தாக்குதலுக்கு எந்தத் தரப்பும் ஆதரவு கொடுக்கப்போவதில்லை. பெண்களுக்கு எதிரான, கலாச்சாரத்துக்கு எதிரான தாக்குதலை நடத்தியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து திராவிடக் கட்சிகள் கண்துடைப்பு நாடகம் ஆடுகின்றன. ஆனால்,. இதற்காக, கி.வீரமணியைக் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கருப்புச் சட்டை அணிவது அவர்கள் உரிமை என்றால் தாலி அணிவது இவர்கள் உரிமை. கருப்புத் துணி என்பது துக்க நிகழ்ச்சிக்கு அடையாளமாகப் போட்டுக்கொள்வது… திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் கருப்புச் சட்டை அணிந்து பங்கேற்கக் கூடாது என்று பெண்கள் வெகுண்டெழுந்தால் இவர்கள் என்ன செய்வார்கள்? மக்களின் நம்பிக்கை சார்ந்த விஷயங்களில் தலையிட்டால் தமிழகம் முழுவதும் கரு;ப்புச் சட்டை அகற்றும் போராட்டம் வெடிக்கும் என்றார்.

Related articles

Recent articles

spot_img