December 17, 2025, 2:11 PM
28.3 C
Chennai

இது டீச்சர்களுடன் ஓடும் சீஸன்: சினிமா தலைப்பல்ல; திண்டுக்கல் சம்பவம்

teacher-student திண்டுக்கல்: திண்டுக்கல்லில் ஆசிரியை ஒருவருடன் அவரை விட வயது குறைந்த மாணவன் ஒருவன் காதலில் விழுந்து கை கோத்து காணாமல் போயுள்ளான். ஏற்கெனவே நெல்லை மாவட்டத்தில் ஒரு சம்பவம் இதேபோல் நடந்துள்ளதால் இது திண்டுக்கல் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது டீச்சர்கள் ஓடிப் போகும் சீஸனோ என்று மலைக்க வைக்கும் வகையில் இருப்பதால், இதே போன்ற கதை அம்சங்களுடன் சினிமாக்களோ, சீரியல்களோ இனி வரலாம் என்ற அளவுக்கு இந்தச் சம்பவங்கள் இப்போது பேசப் படுகின்றன. நெல்லை மாவட்ட சம்பவத்தில் பள்ளியில் படித்த பத்தாம் வகுப்பு மாணவனுடன் இள வயது ஆசிரியை கைகோத்துக் காணாமல் போனார். திண்டுக்கல் சம்பவத்தில், டுட்டோரியல் கல்லூரியில் படித்த மாணவர் ஒருவர் ஆசிரியையுடன் மாயமாகி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். திண்டுக்கல், முத்தழகுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் 21 வயதாகும் இளம் பெண் செபஸ்டின் சாரதி. இவர் ஆசிரியர் பயிற்சி முடித்து விட்டு திண்டுக்கல்லில் உள்ள ஒரு டுடோரியல் பள்ளியில் ஆசிரியையாகப் பணி புரிந்து வந்தார். அதே டுடோரியல் பள்ளியில் 18 வயதாகும் சதீஷ் குமார் என்ற மாணவர் படித்து வந்தார். சதீஷ் குமார் கடந்த வருடம் நடந்த பிளஸ் 2 தேர்வில் தமிழைத் தவிர அனைத்துப் பாடங்களிலும் தோல்வி அடைந்தாராம். இதனால் எப்படியாவது பாஸ் ஆகி விட வேண்டும் என்ற உந்துதலில், டுடோரியல் பள்ளியில் சேர்ந்து படித்துள்ளார். அந்த வகுப்பில் ஆசிரியை செபஸ்டின் சாரதி பாடம் நடத்தும்போது சதீஷ் குமாருக்கு அடிக்கடி பாடத்தில் சந்தேகம் வருமாம். அதனால் அவ்வப்போது எழுந்து கேள்விகள் கேட்டுக் கொண்டே இருப்பாராம். இருவருக்கும் இடையே இதனால் தனிப்பட்ட வகையில் பேச்சு வளர்ந்துள்ளது. ஒரு கட்டத்தில், கேள்வி கேட்கும் சதீஷ் குமாரை ஆசிரியைக்கு மிகவும் பிடித்துப் போய் விட்டது. வகுப்பில் இருவரும் ஒருவருக்கு ஒருவர் கேள்வி பதில் விளையாட்டைத் தொடர, நாளடைவில் இருவரும் காதலர்களாக மாறியுள்ளனர். இதை அடுத்து, ஆசிரியை மாணவராக இருக்கும் இருவரும், வகுப்பு முடிந்ததும் காதலர்களாக உரு மாறி பல்வேறு இடங்களுக்கும் சுற்றியுள்ளனர். விடுமுறை நாட்களிலும் கூட விடாமல் வெளியே சென்று வரவே இருவரது வீட்டினருக்கும் சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் இருவரின் நடவடிக்கைகளையும் உளவு பார்த்துள்ளனர். அப்போது, இருவரும் காதலிப்பது தெரியவந்துள்ளது. எனவே இரு வீட்டாரும் இருவரையும் தனியே அழைத்து, இது தவறு, இவ்வாறு பழகுவதை நிறுத்திக் கொண்டு, ஒருவரை ஒருவர் மறந்து விடுங்கள் என்று கூறியுள்ளனர். ஆனாலும் பெற்றோர், வீட்டாரின் கண்டிப்பை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு, செபஸ்டின் சாரதியும், சதீஷ் குமாரும் தொடர்ந்து காதலித்து வந்தனர். இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர், செபஸ்டின் சாரதியும் சதீஷ் குமாரும் திடீரென காணாமல் போயுள்ளனர். இருவரைக் குறித்தும் ஏற்கெனவே தெரியும் என்பதால், இருவரும் சேர்ந்தே மாயமாகிவிட்டதாகத் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து இருவரின் பெற்றோரும் இவர்களைக் காணவில்லை என்று போலீஸில் புகார் கொடுத்துள்ளனர். நெல்லை மாவட்டம் செங்கோட்டை, கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்த பள்ளி ஆசிரியை கோதையும், மாணவன் சிவாவும் காணாமல் போய் பீதியைக் கிளப்பிய சம்பவம் இன்னும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், இந்தச் சம்பவம் தமிழகத்தில் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அச்சங்கோவில் ஆராட்டு உத்ஸவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்!

பல நூற்றாண்டுகள் பழமையான இந்த சாஸ்தா கோயில் பக்தர்களிடம் ஏற்படுத்திய நம்பிக்கை ஒவ்வொரு நாளும் வளர்ந்து வருகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இன்று குசேலர் தினம்! குருவாயூரப்பன் கோயிலில் கொண்டாட்டம்!

இன்று குசேலர் தின சிறப்பு வழிபாடு சிறப்பு நிவேதிய பிரசாதமும் செய்து படைக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டது

பஞ்சாங்கம் – டிச.17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தமிழகத்தை ஆபத்தில் தள்ளும் திமுக., அரசு; இந்து முன்னணி கண்டனம்

தமிழக முதல்வர் அவசரம் அவசரமாக சென்னை விமான நிலையம் அருகில் உள்ள நங்கநல்லூர் பகுதியில் ஹஜ் விடுதிக்கு இன்று அடிக்கல் நாட்டியுள்ளார்.

ஆரன்முழா பார்த்தசாரதி கோயிலில் இருந்து… டிச.23ல் ஐயப்பனுக்கு தங்க அங்கி!

அன்று மாலை சுவாமிஜி தங்க அங்கி அணிவித்து தீபாராதனை வழிபாடு நடத்தி பின்னர் இந்த தங்க அங்கி ஆரன்முழா பார்த்தசாரதி கோவிலுக்கு மீண்டும் கொண்டுவரப்படும்.

Topics

அச்சங்கோவில் ஆராட்டு உத்ஸவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்!

பல நூற்றாண்டுகள் பழமையான இந்த சாஸ்தா கோயில் பக்தர்களிடம் ஏற்படுத்திய நம்பிக்கை ஒவ்வொரு நாளும் வளர்ந்து வருகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இன்று குசேலர் தினம்! குருவாயூரப்பன் கோயிலில் கொண்டாட்டம்!

இன்று குசேலர் தின சிறப்பு வழிபாடு சிறப்பு நிவேதிய பிரசாதமும் செய்து படைக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டது

பஞ்சாங்கம் – டிச.17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தமிழகத்தை ஆபத்தில் தள்ளும் திமுக., அரசு; இந்து முன்னணி கண்டனம்

தமிழக முதல்வர் அவசரம் அவசரமாக சென்னை விமான நிலையம் அருகில் உள்ள நங்கநல்லூர் பகுதியில் ஹஜ் விடுதிக்கு இன்று அடிக்கல் நாட்டியுள்ளார்.

ஆரன்முழா பார்த்தசாரதி கோயிலில் இருந்து… டிச.23ல் ஐயப்பனுக்கு தங்க அங்கி!

அன்று மாலை சுவாமிஜி தங்க அங்கி அணிவித்து தீபாராதனை வழிபாடு நடத்தி பின்னர் இந்த தங்க அங்கி ஆரன்முழா பார்த்தசாரதி கோவிலுக்கு மீண்டும் கொண்டுவரப்படும்.

பயங்கரவாதம்: முதிர்ச்சியான விவாதம் தேவை!

பயங்கரவாத செயல்களை பற்றி விவாதிக்கும் போது, 'நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம்' என்பதற்கும் 'நான்தான் ஏற்கனவே சொன்னேன் இல்லையா' என்ற கூற்றுக்கும் இடம் தரலாகாது.

ஆரியங்காவு ஐயன் கோயிலில் இன்று திருவாபரண வரவேற்பு; திருக்கல்யாண உத்ஸவம் தொடக்கம்!

வரும் 25ஆம் தேதி பாண்டியன் முடிப்பு என்ற திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியும் 26 ஆம் தேதி திருக்கல்யாண விழாவும் 27 ஆம் தேதி மண்டல பூஜை வழிபாடு நடைபெறும்.

பஞ்சாங்கம் டிச.16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories