பூசாரியின் பூணூல் அறுப்பு: சேதுராமன் கண்டனம்

Published:

சென்னை: மயிலாப்பூரில் பூசாரியின் பூணூலை அறுத்து தாக்கிய சம்பவத்துக்கு டாக்டர் ந.சேதுராமன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சென்னையில் பூசாரிகளின் பூணூலை அறுத்தெறிந்த சம்பவம் உச்சகட்ட அநாகரீகம். ஒவ்வொரு மதத்தினரும் அவரவர் கடவுள் நம்பிக்கையில் விதவிதமாய் சின்னங்களை அணிகிறார்கள். அதுபோல பூணூல் அணிவது பிராமணர்கள் மட்டுமல்ல, விஸ்வகர்மா சமூகத்தினரும் அணிகிறார்கள். அண்மைக் காலமாக பல்வேறு தரப்பு மக்களால் பாரம்பரிய உரிமையாக அனுபவிக்கப்பட்டு வரும் நம்பிக்கை மீது தங்களது எண்ணத்தை திணிப்பது என்பது கோழைகள் செய்யும் செயல். தமிழகத்தில் உள்ள ஆட்சிக்கு இடையூறு செய்யவேண்டும் என்கிற எண்ணத்தில் இப்படி மதரீதியாக தாக்குதல் தொடுக்க ஆரம்பித்திருப்பது கலாச்சார மோதல்களுக்கு வித்திடலாம். பொதுமக்களின் உணர்வு களில் அவர்களின் சுதந் திரத்தில் தனிப்பட்ட முறையில் ஈடுபடுவது தண்டனைக்குரிய குற்றமாகும். – என்று தெரிவித்துள்ளார்.

Related articles

Recent articles

spot_img