கூட்டுறவு சங்க பால் கொள்முதல் விலையைக் குறைக்க வாய்மொழி உத்தரவிடப்பட்டுள்ளதாக வைகோ குற்றச்சாட்டு

சென்னை: தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களில் பால் கொள்முதல் விலையைக் குறைக்க வாய்மொழி உத்தரவு இடப்பட்டுள்ளதாக மதிமுக பொதுச் செயலர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும் தொழில், பால் உற்பத்தி ஆகும். தமிழக அரசு கடந்த ஆண்டு வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின் படி, மொத்தம் 11 ஆயிரத்து 503 கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் இயங்கி வருகின்றன. இதோடு மகளிருக்கென 1793 பால் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் இருக்கின்றன. கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் இணைந்துள்ள 2 இலட்சத்து 11 ஆயிரத்து 742 பால் உற்பத்தியாளர்கள்,பால் உற்பத்தி செய்து ஆவின் நிறுவனத்துக்கு விற்பனை செய்கின்றனர். ஆவின் நிறுவனத்தின் மூலம் நாளொன்றுக்கு சுமார் 28 இலட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. தமிழ்நாட்டின் பால் தேவை நாளொன்றுக்கு 1.50 கோடி லிட்டர் ஆகும். இதில் தனியார் நிறுவனங்கள் மூலம் 1 கோடியே 25 இலட்சம் லிட்டரும், ஆவின் நிறுவனம் மூலம் 25 இலட்சம் லிட்டர் பாலும் விற்பனை செய்யப்பட்டு, மக்களின் பால் தேவை பூர்த்திசெய்யப்படுகிறது. தமிழக அரசு கடந்த 2014 அக்டோபர் மாத்தில் பால் கொள்முதலில், பசும்பால் விலையை ஒரு லிட்டர் ரூ.5 ம், எருமைப்பால் ஒரு லிட்டர் ரூ. 4ம் உயர்த்தி, முறையே ரூ. 28 மற்றும் ரூ.35 என பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கி வந்தது. தமிழ்நாடு முழுவதும் தற்போது பால் கூட்டுறவு மையங்களில் பால் கொள்முதல் செய்யும் போது பாலின் தரம், அடர்த்தி நிலையைக் காரணம் காட்டி, அரசு நிர்ணயித்துள்ள விலையில் இரண்டு ரூபாய் குறைத்து வழங்கப்படுவதாக பால் உற்பத்தியாளர்கள் புகார் கூறியுள்ளனர். கூட்டுறவு மையங்களில் பால் கொள்முதலை 10 விழுக்காடு அளவு குறைத்துக்கொள்ள வேண்டும் என்று வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணி அறிந்து ஓ.பன்னீர்செல்வம் அரசு விளக்கம் அளிக்க வேண்டும். தொடர்ச்சியாக வேளாண்மைத் தொழிலில் ஏற்பட்டு வரும் நெருக்கடிகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும், சிமெண்ட் விலை உயர்வு, மணல் விலை உயர்வு போன்ற காரணத்தால் வேலையின்றி தவிக்கும் கட்டுமானப் பணியாளர்களுக்கும், கால்நடை செல்வங்கள்தான் ஆதாரமாக இருக்கின்றன. பால் உற்பத்தி தொழில்தான் ஏழை எளிய மக்களை வாழ வைத்து வருகின்றது. இச்சூழலில் அரசு நிர்ணயித்த பால் கொள்முதல் விலையைக் குறைத்து வழங்குவதும், பால் கொள்முதல் அளவை குறைப்பதற்கு உத்திரவிட்டுள்ளதும் வன்மையான கண்டனத்துக்கு உரியது. அ.தி.மு.க. அரசின் நடவடிக்கைகளால் மக்கள் தனியார் பால் நிறுவனங்களுக்கு பால் விற்பனை செய்வதற்கு கட்டாயமாக தள்ளப்பட்டுள்ளனர். இதனைச் சாதகமாகக் கருதுகின்ற தனியார் பால் நிறுவனங்கள் விவசாயிகளிடம் பால் கொள்முதல் விலையில் மூன்று ரூபாய் குறைத்துவிட்டன. கால்நடைகளுக்கு தீவனங்கள் அளித்து பராமரிக்க முடியாமல் கிராமப்புற மக்கள் திணறிக்கொண்டு இருக்கின்றனர். அ.தி.மு.க. அரசு அறிவித்தபடி கால்நடை தீவனங்கள், பசுந்தாள் தீவனம் மற்றும் உலர் தீவனங்கள் விவசாயிகளுக்கு வழங்கும் திட்டம் உருப்படியாக செயல்படவில்லை. விவசாயிகள் பல இடர்பாடுகளுக்கு மத்தியில் கால்நடைகளைப் பராமரித்து பால் உற்பத்தி செய்தால், அரசு சார்பில் இயங்கும் பால் கூட்டுறவு மையங்கள் அதை முழுமையாகக் கொள்முதல் செய்ய மறுப்பதும், கொள்முதல் விலையைக் குறைத்துத் தருவதும் முறையற்ற செயல் ஆகும். இலட்சக்கணக்கான பால் உற்பத்தியாளர்களை பாதிக்கும் இந்நிலை தொடர்வதை தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்துகிறேன். தனியார் பால் நிறுவனங்களை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை தமிழக அரசு தடுத்து நிறுத்துவதுடன், தனியார் பால் நிறுவனங்கள், பால் உற்பத்தியாளர்களிடம் கொள்முதல் மற்றும் பால் விற்பனை செய்யவும், விலை நிர்ணயிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

Topics

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

Entertainment News

Popular Categories