சென்னை: அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்ந்த அவதூறு வழக்கில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்ந்த அவதூறு வழக்கில் ஜூன் 10ல் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. காசநோய் மருத்துவர் அறிவொளி மரணத்தில் அமைச்சருக்கு தொடர்பு என ஈவிகேஎஸ் பேசியிருந்தார். ஈவிகேஎஸ் பேச்சு தனக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கில் உள்ளது என விஜயபாஸ்கர் வழக்கு தாக்கல் செய்தார்.

