December 6, 2025, 1:12 PM
29 C
Chennai

‘மோடிபொய்’ என ஆங்கில அகராதியில் உள்ளதா?! ராகுலின் பொய்யும்! அகராதியின் மெய்யும்!

modilie - 2025

புது தில்லி : எப்படியாவது பொய்களை அள்ளித் தெளித்து தேர்தலில் வென்று விடுவது என்ற குறிக்கோளுடன் இந்த முறை தேர்தலை எதிர்கொண்டது காங்கிரஸ் கட்சி. வந்த வரை லாபம், போனா முடி வந்தா மலை… என்ற வசனங்களுக்கு ஏற்ப, கிடைத்தவரை லாபம் என்ற கொள்கையுடன் தேர்தலை அணுகிய காங்கிரஸ், அதற்காக எந்த எல்லைக்கும் போகத் தயங்கவில்லை.

ஏற்கெனவே மத்திய பிரதேசத்தில், தாங்கள் மைண்ட் கேம் ஆடியதாகக் கூறிய காங்கிரஸ், அதே உத்தியை இந்த முறை நாடாளுமன்றத் தேர்தலிலும் காட்டத் தொடங்கியது.

இதன் ஒரு பகுதியாக, தேர்தல் பிரசாரம் நிறைவடையும் நாளில், ஆங்கில அகராதியில் ‘மோடி பொய்’ என்ற புதிய வார்த்தை சேர்க்கப்பட்டுள்ளதாக ராகுல் ஒரு டிவீட்
செய்திருந்தார். ஆனால் இதனை போலி என ஆக்ஸ்போர்ட் அகராதி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மே 15ஆம் தேதி அன்று ராகுல் தனது டுவிட்டர் பக்கத்தில் ஆங்கில அகராதியின் பக்கம் ஒன்றின் ஸ்கிரீன்ஷாட் எடுத்து பதிவிட்டார். அதில், ஆங்கில அகராதியில் ‘modilie’ என்ற புதிய வார்த்தை சேர்க்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டிருந்தார்.

rahul modi - 2025ஆக்ஸ்போர்டு அகராதி என ராகுல் தனது டுவீட்டில் குறிப்பிடவில்லை. ஆங்கில அகராதி என்று குறிப்பிட்டு இருப்பினும் ஆக்ஸ்போர்டு அகராதியின் பக்கம் போன்ற ஒரு பக்கத்தைத் தான், காங்கிரஸின் விளம்பரத்துடன் உருவாக்கப்பட்டு, ஸ்கிரீன்ஷாட் பகிரப்பட்டுள்ளது.

மேலும், modilie என்ற வார்த்தையின் பொருளாக, உண்மையை தொடர்ந்து திரித்துக் கூறுபவர், இடைவிடாமல் பொய் சொல்வதை தனது பழக்கமாகக் கொண்டவர், ஓய்வில்லாமல் பொய் பேசுபவர் என்பன போன்ற வாக்கியங்கள் இடம்பெற்றுள்ள ஸ்கிரீன்ஷாட்டை ராகுல் பகிர்ந்திருந்தார்.

modilie.in என்ற பெயரில் இணையப் பக்கம் ஒன்று துவங்கப்பட்டு, அதில் பிரதமர் மோடி இது வரை கூறிய  பொய்கள் பட்டியல் இடப்பட்டு உள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். ராகுலின் இந்த டுவிட்டர் பதிவை சுட்டுக்காட்டி உள்ள ஆக்ஸ்போர்டு அகராதி நிர்வாகம், அவர் பகிர்ந்துள்ளது போலியான படம் என்றும், ஆங்கில அகராதியில் அப்படி எந்த வார்த்தையும் சேர்க்கப்படவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளது.Rahul Gandhi Narendra Modi - 2025

இவ்வாறு போலியான ஒரு போட்டோஷாப் படத்தை திட்டமிட்டு உருவாக்கி, அதனைப் பகிர்ந்து, பிரதமர் மோடி குறித்த அவதூறை பதிவிட்டதற்காக ராகுலை பலரும் காய்ச்சி எடுத்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories