எம்.பி., ஆனால்… அவமானம் வைகோ.,வுக்குதான்: கலாய்த்த ஹெச்.ராஜா!

நெல்லை மேற்கு மாவட்ட அனைத்து ஹிந்து சமுதாய பாதுகாப்பு பேரவை சார்பில் காவல்துறையை கண்டித்து செங்கோட்டை பாம்பே ஸ்டோர் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பா.ஜ.க தேசிய செயலாளர் H.ராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
நெல்லை மேற்கு மாவட்ட அனைத்து ஹிந்து சமுதாய பாதுகாப்பு பேரவை சார்பில் காவல்துறையை கண்டித்து செங்கோட்டை பாம்பே ஸ்டோர் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பா.ஜ.க தேசிய செயலாளர் H.ராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

மாநிலங்களவை எம்.பி. ஆனால், அவமானம் வைகோ.,வுக்குதான் என்று கலாய்த்தார் பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா!

நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் திருநெல்வேலி மேற்கு மாவட்ட அனைத்து இந்து சமுதாய பாதுகாப்பு பேரவை சார்பில் தமிழக காவல் துறையையும் கண்டித்து செங்கோட்டை கீழ பஜார் பகுதியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பாஜக., தேசிய செயலாளர் ஹெச்.ராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்!

அப்போது அவர், தமிழகத்தில் அனைத்து துறை அதிகாரிகளும் இந்துக்களுக்கு ஏதிராக செயல்படுவது கண்டிக்கத் தக்கது. குறிப்பாக காவல்துறை இந்துக்கள் நடத்தும் விழாக்களுக்கு இடையூறு செய்வது, இந்து அமைப்பு நிர்வாகிகள் மீது பொய் வழக்குகள் போடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.  கடந்த 17 ஆண்டுகளாக நெல்லை மாவட்டத்தில் பணியில் இருக்கும் காவல்துறை அதிகாரிகளை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும்.

senkottai hindu meet4 - 2026தற்போது வைகோ எம்.பி.,க்காகப் போட்டியிடுகிறார். தேச துரோகம் என்றால்…. அப்படித்தான் பேசுவேன் மீண்டும் மீண்டும் பேசுவேன்… என்றார். இப்போது அவர் எம்பி.,ஆனால் உறுதி மொழி எடுக்க வேண்டும்! அப்போது இறையாண்மையைக் காப்பேன் என்று கூற வேண்டும். இதை விட அசிங்கம், இதை விட அவமானம் வேறு எதுவும் கிடையாது. உண்மையில் வைகோ தனக்குத் தானே அவமானம் செய்து கொள்கிறார்.. என்று  பேசினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய ஹெச்.ராஜா,  பாஜக., வின் வளர்ச்சி உயர்ந்து கொண்டே வருகிறது. கடந்த தேர்தலில் 19 சதவீதமாக இருந்த வாக்கு வங்கி இந்த தேர்தலில் 33 சதவீதமாக உயர்ந்துள்ளது.

ALSO READ:  தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக.,வுடன் கூட்டணி தொடரும்! வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் தேஜ., கூட்டணி வேட்பாளர் ஏ .சி சண்முகம் வெற்றி பெறுவார்.

மீண்டும் சொல்கிறேன்… வைகோ.,வுக்கு இதைவிட அவமானம் வேறு எதுவுமே இல்லை! நீதிமன்றத்தில் என்ன சொல்கிறார்? மீண்டும் மீண்டும் செய்வேன் என்கிறார். வேட்பு மனு தாக்கலின் போது இந்திய ஒருமைப்பாட்டை காப்பேன் என்கிறார். 24 மணி நேரத்தில் எத்தனை மாற்றங்கள் பாருங்கள்.

senkottai hindu meet1 - 2026வேலூர் தொகுதியில் ஏசி சண்முகம் வெற்றி பெறுவார். 1967இல் மூன்று படி லட்சியம், ஒரு படி நிச்சயம் என்று சொன்ன திமுக வெற்றி பெற்றது. அதுபோல் இந்த நாடாளுமன்ற தேர்தலிலும் மே 24ஆம் தேதி 5 பவுன் நகை அடகு ரத்து என்று சொல்லி வீட்டுக்கு வீடு இருந்த நகைகள் அனைத்தையும் வங்கிகளில் வைக்கச் செய்தார்கள். இது தான் அவர்கள் பெற்ற வெற்றியின் ரகசியம்.

ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தது காங்கிரஸ் திமுக அரசுதான்! ஆனால் கேள்வி கேட்பது அனைத்தும் பாஜக.,வை! ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கொடுத்தது அதிமுக பாஜக அரசு மட்டுமே.!

ALSO READ:  திமுக வேட்பாளர் வீட்டில் நகை கொள்ளை - வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது...

இனிமேல் தினந்தோறும் உண்மையைச் சொல்லி விடுவது என்று முடிவு செய்து இனி தொடர்ந்து உண்மையே பேசுவோம். தினந்தோறும் நடைபெறும் தவறுகளை சுட்டிக் காட்டுவோம்.

senkottai hindu meet3 - 2026சங்கர மடம் இல்லை என்றால் திமுக, திக அமைப்பு வந்திருக்காது. இவருக்கு அரசியல் சோறு போடுவது சங்கரமடம் தான்.  ஸ்டாலினை அடுத்த தலைவராக கொண்டு வருவீர்களா என்று கேட்டதற்கு, திமுக என்ன சங்கர மடமா என்று கேட்டார் மு.கருணாநிதி. ஆனால் இன்று அடுத்து வாரிசுகள் வந்துவிட்டது. திமுகவில் ஆற்காடு வீராசாமி, துரைமுருகன் உள்ளிட்டோர் பெஞ்சு துடைக்கவும், போஸ்டர் ஒட்டவும் மட்டுமே பயன்படுவார்கள். அவர்களுக்கு தலைமைப் பொறுப்பு என்பது இனிக் கிடையாது.

நாடாளுமன்றத்தில் தமிழக எம்பிக்கள் தூங்கிக் கொண்டிருப்பார்களென மூன்று முறை டுவிட்டரில் போட்டுள்ளேன். ஊழலின் ஊற்றுக் கண்ணே இவர்கள் தானே. ஆனால் ஊழலை ஒழிப்பேன் என்று தயாநிதி மாறன், டி .ஆர். பாலு பேசலாமா.???

தமிழ் உணர்வுகள் இருந்தால் சமசீர் பள்ளி துவங்கி இருக்க வேண்டும்.

விவசாயிகளுக்காக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்த பிஜேபி தமிழகத்திற்கும், தமிழக விவசாயிகளுக்கும் மத்திய அரசு துரோகம் இழைக்காது என்றார் ஹெச்.ராஜா.

ALSO READ:  தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories