நாளை… வசந்த பஞ்சமி! என்ன செய்ய வேண்டும்?!

Published:

saraswathi - 2026

நாளை 30 -1- 2020 ஸ்ரீ பஞ்சமி எனப்படும் வசந்த பஞ்சமி புண்ணிய தினம். வசந்த பஞ்சமி முதல் வசந்த காலத்தின் இயற்கைச் சூழலை உணர தொடங்கி விடுவோம். தேவி பாகவதத்தில் ஸ்ரீ பஞ்சமியின் மகிமை பேசப்படுகிறது.

சரஸ்வதி தேவி முதன் முதலில் தோன்றிய நாள் இது. இன்று சரஸ்வதி தேவியை விக்ரகம், புத்தகம் வடிவில் ஆவாகனம் செய்து பூஜிப்பதால் கோரிக்கைகள் நிறைவேறும். அறிவுக்கூர்மை கல்வி, ஞாபக சக்தி, வாக்சக்தி வளர்ச்சி அடையும்.

வெண்ணிற மலர்களை சந்தனத்தில் தோய்த்து சரஸ்வதி தேவியை அர்ச்சனை செய்து வெள்ளை வஸ்திரம், முத்து மாலை அணிவித்து, பசும் பாலில் அரிசி பாயசம், வெண்ணெய், தேங்காய், வாழைப்பழம் நிவேதனம் செய்து தேவியின் அருளைப் பெறும் அரிய பண்டிகை இது.

எல்லா தேவதைகளும் ஸ்ரீ பஞ்சமி அன்று சரஸ்வதி தேவியை வழிபடுகின்றனர். கோதாவரி தீரத்தில் வியாச மகரிஷி பிரதிஷ்டை செய்த பாசரா சரஸ்வதி க்ஷேத்திரத்தில் மிக விமரிசையாக இந்த பண்டிகை சாரதா ஜெயந்தியாக கொண்டாடப்பட்டு பிரம்மோற்சவம் நடத்தும் சம்பிரதாயம் உள்ளது.

மாக மாதம் சுக்ல பக்ஷம் பஞ்சமி திதியை ஒரிசா, மேற்குவங்காளம் போன்ற மாநிலங்களில் மிக விமரிசையாக கொண்டாடுவார்கள்.

ALSO READ:  சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

மாணவர்கள் சரஸ்வதி தேவியை வழிபட உகந்த நாள் இது. சரியான முடிவு எடுக்கும் புத்தியை அருளக் கூடியவள் சரஸ்வதிதேவி.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img