சாமை ஆப்பம், உப்புமா சமைப்பது எப்படின்னு இங்கே சொல்றோம்… சாப்பிடலாம் வாங்க..!
சாமை ஆப்பம் ….
சாமை. 1 கப்
உளுந்து 1 டேபிள் ஸ்பூன்
தேங்காய் துருவல் 1/2மூடி
தேவையான உப்பு
சாமை, உளுந்து இரண்டையும் சேர்த்து 4 மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் தேங்காய் துருவல், உப்பு சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். இதை 8 மணி நேரம் புளிக்க விடவும். இந்த மாவில் சிறிது சமையல் சோடா, சர்க்கரை சேர்த்து கலந்து ஆப்பச் சட்டியில் சுட்டு எடுக்கவும். சாமை ஆப்பம் தயார்.
சாமை உப்புமா
சிறு தானியங்கள் மிகுந்த சத்துள்ளவை. நார் சத்து நிரம்பியவை. சர்க்கரை நோயை கட்டுப்பாட்டுக்குள் வைப்பன ஆகும். சிறு தானியங்களில் ஒன்றான சாமை ஆண்களுக்கு மிகவும் நல்லதாகும். இப்போது சாமை உப்புமா எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையானவை:
கடுகு. 1 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு 1 ஸ்பூன்
கடலை பருப்பு. 1 ஸ்பூன்
சீரகம். 1 ஸ்பூன்
வெங்காயம் 2 பொடியாக நறக்கிக்கொள்ளவும்
பச்சை மிளகாய். 4 அல்லது 5
கேரட். துருவியது
பீன்ஸ் பொடியாக நறுக்கியது
செய்முறை:
சாமையை அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம், கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, போட்டு பொரிந்ததும், கறிவேப்பிலை, பச்சை மிளகாய், போட்டு பின் காய்கறிகள் போட்டு 5 நிமிடங்கள் வதக்கவும்.
பின் ஒன்றுக்கு மூன்று என்ற அளவில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். தேவையான உப்பு போடவும். தண்ணீர் கொதித்ததும் ஊறிய சாமை சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து வேக வைக்கவும். கடைசியில் 2 ஸ்பூன் நெய் சேர்த்து இறக்கவும். சத்தான சுவையான சாமை உப்புமா தயார்.
- மஞ்சுளா மூர்த்தி