செய்வோமா சேமியா இட்லி!

Published:

semiya-idly
semiya-idly

நாமும் செய்யலாம் அழகான சுவையான சேமியா இட்லி.

தேவையான பொருட்கள்:

ஒரு கப் பாம்பே ரவா
ஒரு கப் சேமியா
தாளிக்க சாமான்கள்
ஒரு கப் தயிர்

செய்முறை:

வாணலியில் உப்புமா தாளிப்பதுபோல் சிறிது எண்ணெய் விட்டு கடுகு பெருங்காயம் உளுத்தம்பருப்பு கடலைப் பருப்பு பச்சை மிளகாய் இஞ்சி கறிவேப்பிலை தாளித்து சேமியாவைப் போட்டு ஒரு ஸ்பூன் நெய்விட்டு வறுத்து அதன் பிறகு ரவையைப் போட்டு வறுத்து உப்பு போட்டு சற்று ஆற வைத்து ஒரு கப் தயிர் விட்டு கலக்கவும். அதனை இட்லி குக்கரில் இட்லி போல் ஆவியில் வைத்து பத்து நிமிடங்கள் ஹையில் 5 நிமிடங்கள் சிம்மில் வைத்து வேக விட்டு எடுக்கவும்.

சேமியா இட்லி ரெடி. தேவையானால் பட்டாணி, கேரட் போன்ற காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாம்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img