December 6, 2025, 5:47 AM
24.9 C
Chennai

காங்கிரஸிடம் இருந்து நாட்டைக் காக்க… தேவை ஒரு சுதந்திரப் போர்!

nehru gandhi family - 2025

காங்கிரஸிடம் இருந்து நம் நாட்டைக் காக்க… இப்போது ஒரு சுதந்திரப் போர் தேவைப்படுகிறது! அதற்குக் காரணமாக அமைந்தது, அதன் வெளிநாட்டுத் தலைமை என்று இத்தனை நாட்கள் நினைத்திருந்தோம். ஆனால், அதன் கொள்கைகளும் கருத்துகளும், எதிர்காலத் திட்டங்களும் இந்த நாட்டை துண்டுதுண்டாக சிதறடிப்பது போல் அமைந்திருப்பதும், கொள்ளை அடிப்பதுமாக இருப்பது கண்கூடாகத் தெரிகிறது! அக்கட்சியின் தேர்தல் அறிக்கை இந்த உண்மையை நாட்டுக்கு லேட்டாக எடுத்துச் சொல்லியிருக்கிறது.

இந்த தேர்தல் அறிக்கைகளை நான் சீரியஸாக எடுத்துக் கொள்வதில்லை! என்ன சொல்லியிருக்கிறது என்று சொன்னவர்களுக்கும் தெரியாது, கேட்டவர்களுக்கும் புரியாது! அறிக்கை வெளியான அன்றே குப்பைத் தொட்டிக்கு போய்விடும்!

ஆனால், இன்று காங்கிரஸ் வெளியிட்டிருக்கும் அறிக்கை, என்னை மிகவும் பாதித்தது! அவர்கள் ஆட்சிக்கு வந்தால், தேசத் துரோகம் செய்வது ஒரு குற்றமாக இருக்காது என்று வாக்குறுதியளித்திருக்கிறார்கள்! அதாவது, தேசத் துரோகம் செய்பவர்களை தண்டிக்கும் சட்டப் பிரிவு 124 A, நீக்கப்படும் என்று கூறியிருக்கிறார்கள்!

எந்த இயக்கம் தேச விடுதலைக்காக பாடுபட்டதோ, எந்த இயக்கத்தில், தேச துரோகத்தை கனவிலும் நினைக்காத தியாக உள்ளங்கள் இருந்தனவோ, இன்று அதே இயக்கம் தேச துரோகம் செய்ய தன்னை தயார்படுத்திக் கொண்டிருக்கிறது! தேசத்துரோகிகளின் கூடாரமாகி இருக்கிறது!

இது ஏதோ கண்மூடித்தனமாக சொல்லப்பட்டது என்றோ, பிழையாக இடம்பெற்றது என்றோ கருத இடமில்லை! காங்கிரசார் மனதில், தேச துரோகமும், இந்நாட்டின் மீது வெறுப்பும் ஆழப்பதிந்திருந்தால் மட்டுமே இதுபோன்று கூறியிருக்க முடியும்! அதை உறுதிப்படுத்தும்விதமாக, வேறு சில வாக்குறுதிகளும் வெளியாகியுள்ளன!

“தீவிரவாதிகளுடன் எந்தவொரு நிபந்தனையும் இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்தப்படும்!

அஃப்ப்ஸா எனப்படும் ராணுவத்தினருக்கு பாதுகாப்பு வழங்கும் சட்டம் நீக்கப்படும்!

பாதுகாப்பு படையினரை வன்மையாக தண்டிக்கும் வகையில் சட்டம் இயற்றப்படும்!” எப்படி இருக்கிறது?

“தீவிரவாதிகளே! பாகிஸ்தானியர்களே! நாட்டில் எங்கு வேண்டுமானாலும் குண்டு வைத்து மக்களைக் கொல்லுங்கள்! உங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் இராணுவத்தினரை பணியிலிருந்து நீக்கி விடுவோம்!” என்று மட்டும்தான் கூறவில்லை! மற்றபடி, இந்நாடு துண்டுத்துண்டாகி சிதற என்னவெல்லாம் வழியுண்டோ, அதையெல்லாம், சிரமேற்கொண்டு செய்வோம் என்று வெளிப்படையாகவே அறிவித்திருக்கிறார்கள்!

நம் நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் கட்டமைக்க நம் முன்னோர்கள் எத்தனை பாடுபட்டிருப்பார்கள்! அதை, தவிடுபொடியாக்க கங்கணம் கட்டிக்கொண்டு அலையும் காங்கிரசை, உயிருடன் உலவ விடலாமா? காங்கிரசுக்கு வாக்களிப்பது நமது அன்னைக்கு வாக்கரிசி போடுவதற்கு சமமாகும்!

நாடு இன்று பாதுகாப்பு, உற்பத்தி, விஞ்ஞானம், தொழில்நுட்பம், விவசாயம், கல்வி, வளர்ச்சி, பொருளாதாரம், என்று பலத்துறைகளில், சர்வதேச அளவில், முன்னேறி வருகிறது! வளர்ந்த நாடுகளுடன் போட்டிப்போடும் வல்லமையை பெற்று வருகிறது! அதை சீரழிக்க முனைந்திருக்கிறது காங்கிரசு!

காங்கிரஸ் இந்நாட்டிற்கு ஏற்பட்டிருக்கும் ஆபத்து! அவர்களுக்கு வாக்களித்து மீண்டும் வாழ்வளிப்பது, வீட்டிற்குள் கொடிய நச்சுப்பாம்பை உலவவிட்டு உறங்குவதற்கு ஒப்பாகும்!!

நாம் உயிருடன் இருக்க வேண்டுமானால், காங்கிரஸின் உயிர் பிரிய வேண்டும்!

நமது தன்மானம் காக்கப்பட வேண்டுமானால், காங்கிரஸ் நிர்வாணமாக்கப்பட வேண்டும்!

நமது எதிர்காலம் வளமையாக இருக்க வேண்டுமெனில், காங்கிரஸ் நிர்மூலமாக வேண்டும்!

நமது குழந்தைகள் ஒழுக்கமாக வளர வேண்டுமெனில், காங்கிரஸ் சீர்குலைய வேண்டும்!

காங்கிரஸ் என்னும் ஆபத்திலிருந்து நம் நாட்டை காக்க வேண்டிய பொறுப்பு நமக்கிருக்கிறது! காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு எதிராக வாக்களிப்பதெ மிகப்பெரிய தேச சேவை!!

– ஜெயகுமார் ஸ்ரீனிவாசன் ( Jeyakumar Srinivasan )

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories