லஞ்ச் பாக்ஸ் கார்னர்: கத்தரிக்காய் பிரியாணி!

Brinjal Biryani
Brinjal Biryani

கத்தரிக்காய் பிரியாணி

தேவையான பொருட்கள்
சின்ன கத்தரிக்காய் – 8 – 10
பெரிய வெங்காயம் – ஒன்று
பாசுமதி அரிசி – 2 கப்
தேங்காய்ப் பால் – ஒரு கப்
எலுமிச்சை பழம் – பாதி
உப்பு – தேவையான‌ அள‌வு
ம‌ஞ்ச‌ள் தூள் – கால் தேக்க‌ர‌ண்டி
க‌றிவேப்பிலை – ஒரு இணுக்கு
மசாலா விழுது செய்ய:
பச்சை மிளகாய் – 5 (கார‌த்திற்கேற்ப‌)
இஞ்சி – சிறிய துண்டு
பூண்டு – 6 (சிறிய பற்கள்)
சோம்பு – ஒரு தேக்க‌ர‌ண்டி
கரம் மசாலா தூள் – அரை தேக்கரண்டி
தாளிக்க‌:
எண்ணெய் – ஒரு தேக்கரண்டி
நெய் – சிறிது
ப‌ட்டை, கிராம்பு, ப்ரிஞ்சி இலை, ஏல‌க்காய்
ம‌ராத்தி மொட்டு – ஒன்று (விருப்பப்பட்டால்)
புதினா, கொத்த‌ம‌ல்லித் தழை – இரண்டு கைப்பிடி

செய்முறை
கத்தரிக்காயில் உள்ள காம்பை நீக்கிவிட்டு, நான்காக நறுக்கி தண்ணீரில் போட்டு வைக்கவும். (தண்ணீரில் போடாமல் வைத்திருந்தால் கத்தரிக்காயின் நிறம் மாறிவிடும்). அரிசியைக் களைந்து தண்ணீர் ஊற்றி 10 நிமிடங்கள் ஊறவைக்கவும். மசாலா விழுது செய்ய கொடுத்துள்ளவற்றில் கரம் மசாலா தூள் தவிர மீதமுள்ளவற்றை ஒரு துளி எண்ணெய் விட்டு லேசாக வதக்கி எடுத்து ஆற வைக்கவும்.

ஆறியதும் அதனுடன் கரம் மசாலா தூள் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு விழுதாக அரைத்து வைக்கவும்.

பாத்திரத்தில் (அல்லது) குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் விட்டு சூடானதும், தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை ஒவ்வொன்றாகப் போட்டு லேசாக வறுக்கவும்.

அதனுடன் மெல்லியதாக நீளவாட்டில் நறுக்கிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலைச் சேர்த்து, வெங்காயம் லேசாக நிறம் மாறும் வரை வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் அரைத்து வைத்துள்ள மசாலா விழுதைச் சேர்த்து, சில நிமிடங்கள் நன்கு வதக்கவும். பிறகு கத்தரிக்காயைப் போட்டு சில நிமிடங்கள் வதக்கி, பொடியாக நறுக்கிய புதினா மற்றும் கொத்தமல்லித் தழைச் சேர்த்து வதக்கவும்.

பிறகு தேவையான அளவு உப்புச் சேர்த்து, தேங்காய்ப் பால் மற்றும் தண்ணீர் கலந்து சேர்க்கவும். (1:2 என்ற விகிதத்தில் 2 கப் அரிசிக்கு, ஒரு கப் தேங்காய் பால், 3 கப் தண்ணீர் சேர்க்கவும்).

தண்ணீர் நன்கு கொதிக்கத் தொடங்கியதும் ஊறவைத்த அரிசியைத் தண்ணீரை வடித்துவிட்டுச் சேர்க்கவும். பிறகு எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொதிக்கவிடவும்.

மீண்டும் கொதி வந்ததும் மூடி போட்டு குறைந்த தீயில் வைக்கவும். 20 நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்துவிடவும். (அல்லது) குக்கரில் செய்தால் கொதி வந்ததும் மூடி வைத்து, ஆவி வந்ததும் வெய்ட் போட்டு 2 விசில் வந்ததும் இறக்கவும். பிறகு ஆவி அடங்கியதும் திறந்து ஃபோர்க் (அல்லது) முள்கரண்டியால் மெதுவாக சாதம் உடையாமல் கிளறிவிடவும்.

கத்தரிக்காய் பிரியாணி தயார். தயிர் அல்லது தயிர் பச்சடியுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

Entertainment News

Popular Categories