லஞ்ச் பாக்ஸ் கார்னர்: நவாபி புலாவ்!

navab pulav - 2026

நவாபி புலாவ்
தேவையான பொருட்கள்
பாசுமதி அரிசி – ஒரு கப்
வெங்காயம் – ஒன்று
தக்காளி – 2
பூண்டு – 4 பல்
இஞ்சி – 2 இன்ச் துண்டு
பச்சை மிளகாய் – 3
சீரக தூள், தனியா தூள் – தலா ஒரு தேக்கரண்டி
சீரகம் – ஒரு தேக்கரண்டி
லவங்கம் – 3
ஏலக்காய் – 3
பட்டை – அரை இன்ச் துண்டு
குருமிளகு – கால் தேக்கரண்டி
பிஸ்தா, பாதாம், வெள்ளரி விதை – ஒரு கப்
உலர்ந்த திராட்சை – ஒரு மேசைக்கரண்டி
எண்ணெய் – 3 மேசைக்கரண்டி
உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை
வெங்காயம், தக்காளியை நீளமாக நறுக்கி வைக்கவும். இஞ்சி, பூண்டு, மிளகாயை பொடியாக நறுக்கி வைக்கவும். அரிசியை பல முறை அலசி விட்டு ஊற வைக்கவும்.

இரண்டு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம், பட்டை, லவங்கம், மிளகு சேர்த்து பொரிய விடவும்.
பொரிந்ததும் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாயை சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.

வாசம் அடங்கியதும் வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக தேவையில்லை ஆனால் கலர் மாறும் வரை வதக்கவும்.
பின்பு தக்காளி மற்றும் தூள் வகைகளை (சீரக, தனியா தூள்) சேர்த்து குழையும் வரை வதக்கவும். தக்காளியை சுடு நீரில் போட்டு தோலுரித்து நறுக்கி சேர்த்தால் சாப்பிடும் போது தோல் மட்டும் தனியாக பல்லில் மாட்டாது.

பின்பு களைந்து வைத்துள்ள அரிசியை சேர்த்து ஐந்து நிமிடம் அல்லது அரிசியில் உள்ள தண்ணீர் வற்றும் வரையில் வதக்கவும். வதக்கி ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து வேக விடவும்.
வேறு ஒரு கடாயில் மீதமுள்ள எண்ணெயை விட்டு சூடானதும் நட்ஸ் மற்றும் திராட்சை சேர்த்து வறுத்தெடுக்கவும். பொன்னிறமானால் போதும் இல்லையென்றால் கசந்து விடும்.

இதை வெந்த புலாவுடன் சேர்த்து ஒரு போர்க் கொண்டு மெதுவாக கிளறவும். இல்லையென்றால் சாதம் உடைந்து விடும். சுவையான ஹைதராபாதி நவாபி புலாவ் ரெடி.

பச்சை மிளகாயை நேரிடையாக எண்ணெயில் போட்டு வதக்குவதால் காரம் கூடும். அதனால் போதிய அளவு காரத்தை கூட்டியோ அல்லது குறைத்துக் கொள்ளலாம். வேண்டுமானால் சிறிதளவு குங்கும பூவை சிறிதளவு பாலில் கலந்து சாதத்தில் தெளித்து விட்டு பரிமாறலாம். வாசமாக இருக்கும். குங்குமப் பூவிருக்கு பல நற்குணங்கள் உள்ளது. அதில் உள்ள “க்ரோசின்” என்ற ஒரு வஸ்து ஞாபக சக்தியை தூண்டுமாம், நினைவாற்றலை பெருக்கும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories