லஞ்ச் பாக்ஸ் கார்னர்: நவாபி புலாவ்!

navab pulav - 2026

நவாபி புலாவ்
தேவையான பொருட்கள்
பாசுமதி அரிசி – ஒரு கப்
வெங்காயம் – ஒன்று
தக்காளி – 2
பூண்டு – 4 பல்
இஞ்சி – 2 இன்ச் துண்டு
பச்சை மிளகாய் – 3
சீரக தூள், தனியா தூள் – தலா ஒரு தேக்கரண்டி
சீரகம் – ஒரு தேக்கரண்டி
லவங்கம் – 3
ஏலக்காய் – 3
பட்டை – அரை இன்ச் துண்டு
குருமிளகு – கால் தேக்கரண்டி
பிஸ்தா, பாதாம், வெள்ளரி விதை – ஒரு கப்
உலர்ந்த திராட்சை – ஒரு மேசைக்கரண்டி
எண்ணெய் – 3 மேசைக்கரண்டி
உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை
வெங்காயம், தக்காளியை நீளமாக நறுக்கி வைக்கவும். இஞ்சி, பூண்டு, மிளகாயை பொடியாக நறுக்கி வைக்கவும். அரிசியை பல முறை அலசி விட்டு ஊற வைக்கவும்.

இரண்டு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம், பட்டை, லவங்கம், மிளகு சேர்த்து பொரிய விடவும்.
பொரிந்ததும் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாயை சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.

வாசம் அடங்கியதும் வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக தேவையில்லை ஆனால் கலர் மாறும் வரை வதக்கவும்.
பின்பு தக்காளி மற்றும் தூள் வகைகளை (சீரக, தனியா தூள்) சேர்த்து குழையும் வரை வதக்கவும். தக்காளியை சுடு நீரில் போட்டு தோலுரித்து நறுக்கி சேர்த்தால் சாப்பிடும் போது தோல் மட்டும் தனியாக பல்லில் மாட்டாது.

பின்பு களைந்து வைத்துள்ள அரிசியை சேர்த்து ஐந்து நிமிடம் அல்லது அரிசியில் உள்ள தண்ணீர் வற்றும் வரையில் வதக்கவும். வதக்கி ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து வேக விடவும்.
வேறு ஒரு கடாயில் மீதமுள்ள எண்ணெயை விட்டு சூடானதும் நட்ஸ் மற்றும் திராட்சை சேர்த்து வறுத்தெடுக்கவும். பொன்னிறமானால் போதும் இல்லையென்றால் கசந்து விடும்.

இதை வெந்த புலாவுடன் சேர்த்து ஒரு போர்க் கொண்டு மெதுவாக கிளறவும். இல்லையென்றால் சாதம் உடைந்து விடும். சுவையான ஹைதராபாதி நவாபி புலாவ் ரெடி.

பச்சை மிளகாயை நேரிடையாக எண்ணெயில் போட்டு வதக்குவதால் காரம் கூடும். அதனால் போதிய அளவு காரத்தை கூட்டியோ அல்லது குறைத்துக் கொள்ளலாம். வேண்டுமானால் சிறிதளவு குங்கும பூவை சிறிதளவு பாலில் கலந்து சாதத்தில் தெளித்து விட்டு பரிமாறலாம். வாசமாக இருக்கும். குங்குமப் பூவிருக்கு பல நற்குணங்கள் உள்ளது. அதில் உள்ள “க்ரோசின்” என்ற ஒரு வஸ்து ஞாபக சக்தியை தூண்டுமாம், நினைவாற்றலை பெருக்கும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதுரை வட்டார ஆலயங்களில் சனிப்பெயர்ச்சி சிறப்பு வழிபாடு

மாவட்டத்தில் உள்ள கோயில்களில், மார்ச்..6..ம் தேதி வெள்ளிக்கிழமை சனிப்பெயர்ச்சி விழா நடைபெறுகிறது.

மார்ச் 1ல் மதுரை வரும் பிரதமர் மோடி! எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா?

வரும் ஞாயிறு மார்ச் 1 பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் தமிழ்நாட்டில்...

‘3 முறை முதல்வர்’ ஓ.பன்னீர்செல்வம், ‘குடும்பக் கட்சி’ திமுக.,வில் இணைந்தார்!

மதிமுகவினர் திரும்பவும் திமுகவுக்கு வந்தபோது கருணாநிதி சொன்னார். "மதிமுக என்பதற்கு அர்த்தம் "மறுபடியும் திமுக" என்பதுதான்" இப்ப... அதிமுகவுக்கு அர்த்தம்  “அவங்களும் திமுகதான்”

பஞ்சாங்கம் பிப்.27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

T20 WC 2026: விறுவிறுப்பான கட்டத்தில் சூப்பர் 8 போட்டிகள்!

அரையிறுதிக்குச் செல்லும் அணிகள் எவை என இன்னமும் முடிவாகவில்லை. நாளை (27.02.2026) இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கிடியேயான ஆட்டம்

Topics

மதுரை வட்டார ஆலயங்களில் சனிப்பெயர்ச்சி சிறப்பு வழிபாடு

மாவட்டத்தில் உள்ள கோயில்களில், மார்ச்..6..ம் தேதி வெள்ளிக்கிழமை சனிப்பெயர்ச்சி விழா நடைபெறுகிறது.

மார்ச் 1ல் மதுரை வரும் பிரதமர் மோடி! எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா?

வரும் ஞாயிறு மார்ச் 1 பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் தமிழ்நாட்டில்...

‘3 முறை முதல்வர்’ ஓ.பன்னீர்செல்வம், ‘குடும்பக் கட்சி’ திமுக.,வில் இணைந்தார்!

மதிமுகவினர் திரும்பவும் திமுகவுக்கு வந்தபோது கருணாநிதி சொன்னார். "மதிமுக என்பதற்கு அர்த்தம் "மறுபடியும் திமுக" என்பதுதான்" இப்ப... அதிமுகவுக்கு அர்த்தம்  “அவங்களும் திமுகதான்”

பஞ்சாங்கம் பிப்.27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

T20 WC 2026: விறுவிறுப்பான கட்டத்தில் சூப்பர் 8 போட்டிகள்!

அரையிறுதிக்குச் செல்லும் அணிகள் எவை என இன்னமும் முடிவாகவில்லை. நாளை (27.02.2026) இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கிடியேயான ஆட்டம்

ஹைதராபாத் தூத்துக்குடி இடையே நேரடி ரயில் சேவை; திருவண்ணாமலை வழி!

ரயில்வே வாரியம் இதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதற்கான அறிவிப்புகளை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ளார்.

தேசத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதிலேயே குறியாக இருக்கும் காங்கிரஸ்!

ஏற்கெனவே நீங்கள் அம்மணக்கட்டைகள் தான் என்பது தேசத்திற்கு நன்கு தெரியும். பிறகு உடைகளை அவிழ்த்துப் போட என்ன அவசியம்? 

ஆன்றோர்கள் தேசமடி பாப்பா

ஆன்மீகத்தை கையில் எடுத்தாலும் அதன்மூலம் சமூகநீதியை பரப்பிய ஸ்ரீ ராமானுஜரை தன் மடியில் வைத்துக் கொண்டாடிய தேசமடி பாப்பா நம் பாரத கண்டம்.

Entertainment News

Popular Categories