திருப்புகழ் கதைகள்: பிருகன்னளை

thiruppugazh stories
thiruppugazh stories

திருப்புகழ்க் கதைகள் 210
– முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியன் –

சிந்துர கூரமருப்பு – பழநி
ப்ருகன்னளை

            மறைந்து வாழவேண்டிய பதின்மூன்றாம் ஆண்டு வந்ததும், அர்ஜுனன் பிருகன்னளை என்ற திருநங்கையாக மாறி விராட நாட்டின் அரண்மனையை அடைந்தார். ஊர்வசி தந்த சாபத்தை இந்த ஓரண்டு அனுபவிக்க முடிவு செஉதார். இந்திரனின் சபையில் ஆடல் பாடல்களில் வல்லவரான சித்திரசேனர் என்ற கந்தர்வரிடமிருந்து தான் கற்றுக்கொண்ட அவரது ஆடல், பாடல் திறன்களை அவர் மன்னருக்கு விளக்கினார். அவர் ஒரு திருநங்கை என்பது குறித்து விராட மன்னருக்கு கடுமையான சந்தேகம் இருந்தபோதிலும், அவர் பலமுறை சரிபார்த்து, பிருகன்னளை உண்மையில் திருநங்கை என்பதை உறுதிப்படுத்தினார். அதன்பிறகு இளவரசி உத்தரையின் நடன ஆசிரியராக பிருகன்னளை பொறுப்பேற்றார். பிருகன்னளை பெண்களுக்காக அரண்மனையில் தங்கியிருந்தார்,

இளவரசர் உத்தர குமாரருக்கு தேரோட்டி

            விராட நாட்டில் பாண்டவர்கள் தஞ்சமடைந்துள்ளனர் என்று கௌரவர்கள் சந்தேகித்தனர். எனவே விராட நாட்டின் பசுக்களைத் திருடி அவர்களைத் தாக்கும்படி ஆணையிட்டனர். பசுக்களை கொள்ளையடித்த மறுநாளே, கௌரவர்கள் பீஷ்மர், துரோணர், கர்ணன் உள்ளிட்ட ஒரு பெரிய படையைத் திரட்டி அந்தப் பகுதியை நெருங்கினர். மாலினியின் பெயரைப் பெற்ற திரௌபதி, இளவரசர் உத்தர குமாரரை தேரின் சாரதியாக பிருகன்னளையை அனுப்புமாறு விராட நாட்டின் இராணியிடம் கூறினாள். அந்நாள் பாண்டவர்களின் அஞ்ஞாதவாசத்தின் கடைசி நாள் மற்றும் அர்ஜுனனின் சாபம் முடிவடைவதற்கான ஓராண்டு நிறைவு நாளும் ஆகும். எனவே போரின் இடையில் பிருகன்னளை அர்ஜுனனாக மாறினார். பின்னர் அவர் உத்தரகுமாரனுக்கு பாண்டவர்கள் பற்றிய இரகசியத்தை தெரியப்படுத்தினார். மேலும் அவரை நம்பவைக்க தனது பத்து வெவ்வேறு பெயர்களான விஜயன், தனஞ்சயன், சவ்யசாக்சி, கடேக்சகன், சுவேதவாகனன், பிபாஸ்து, கிருதி, பார்த்தன், பால்குனன் மற்றும் ஜிஷ்ணு ஆகியவற்றை அந்தப் பெயர்களுக்கான பொருள்களையும் விளக்கினார்.

            பின்னர் அர்ஜுனனாக தனது உண்மையான வடிவத்தில், அவர் தனது காண்டீபம் என்ற வில்லையும் அம்புகளையும் மீட்டெடுத்து கௌரவர்களுடன் போருக்குச் சென்றார். இச்சமயத்தில் உத்திரகுமாரனை சாரதியாக்கி அவர் உதவியுடன் அர்ச்சுனன் கௌரவர்களை விரட்டியடிக்கவும், மத்சய இராச்சியத்தின் மாடுகளை மீட்டெடுக்கவும் முடிந்தது. இந்த போரில், பீஷ்மர், துரோணர், கிருபா, கர்ணன், அஸ்வத்தாமா உட்பட அனைத்து கௌரவ வீரர்களையும் தோற்கடித்தார். அவர் சம்மோகன அஸ்திரத்தை அழைத்து அதன் உதவியால் அவர்கள் அனைவரையும் தூங்கச் செய்தார்.

ALSO READ:  முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!

            அவர்களை தூங்கச் செய்வதற்குப் பதிலாக ஏன் அவர்களைக் கொல்லக் கூடாது என்று அர்ஜுனனிடம் உத்தரகுமாரன் கேட்டார். போருக்குப் புறப்படும் முன்னர் உத்திரகுமாரனின் சகோதரியான உத்திரை தனது பொம்மைகளை அலங்கரிக்க போர்க்களத்தில் ஆடைகளைச் சேகரித்து வருமாறு தனது சகோதரனைக் கேட்டிருந்தாள். எனவே அர்ஜுனன் உத்தர குமாரனிடம் இறந்தவர்களின் உடைகள் இரத்தக் கறையால் தூய்மையற்றதாக மாறும்; அதனால் உடைகளை உத்திரைக்காக சேகரிக்க இயலாமல் போய்விடும் என்றும் கூறினார். துரியோதனனின் சிவப்பு ஆடையையும், கர்ணனின் இளஞ்சிவப்பு நிற ஆடையையும், துச்சாதனனின் நீல நிற ஆடைகளையும் உத்திரைக்காக சேகரிக்கும்படி உத்திரகுமாரனிடன் அர்ச்சுனன் கேட்டுக்கொண்டான்.

உத்திரையை மருமகளாக ஏற்றுக் கொள்வது

            விராட மன்னர் பாண்டவர்களின் உண்மையான அடையாளங்களை அறிந்து ஆச்சரியப்பட்டார். அவர் தனது மகளின் கையைப் பற்றி, அர்ச்சுனனுடன் திருமணம் செய்ய ஆயத்தமானார். இருப்பினும் அர்ச்சுனன் இந்த வாய்ப்பை நிராகரித்தார், ஏனெனில் அவர் அவளுக்கு ஆசிரியராக இருந்தவர். ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களை தங்களது மகளாகவே கருதவேண்டும். அர்ச்சுனரும் அவ்வாறே கருதினார். எனவே அவர் உத்திரையை தனது மகன் அபிமன்யுவிற்குத் திருமணம் செய்ய பரிந்துரைத்தார். விராட மன்னனும் இளவரசியும் இந்த யோசனையை ஏற்றுக்கொண்டனர்.

ALSO READ:  பராபவ - பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

Entertainment News

Popular Categories