நான் ஏன் மூவண்ணக் கொடி தாளை
குண்டூசிகளால் என் சட்டைப் பைகளில்
குத்திக் கொள்வதில்லை தெரியுமா?
காரணத்தைப் படியுங்கள்….
//
சுதந்திர தினக் கொடியேற்றம்…
கொடியின் நிறங்கள்…
பசுமை-செழுமை-இஸ்லாமாம்…
வெண்மை-அமைதி-கிறித்துவமாம்…
காவி-தியாகம்-இந்துவாம்…
***
குண்டூசிகளால் குத்துப் பட்டும்
சட்டைப் பைகளில் ஒட்டிக் கொண்டு
சிரிக்கிது தேசியக் கொடி!
குத்துப் பட்டதோ காவி நிறம்-தியாக நிறம்.
தேசியக் கொடியும்
அதனால்தானே
விழாமல் தாங்கி நிற்கிறது?!
அதுதான் மேலே ஓங்கி
உயரப் பறக்கிறது!
தியாகம் மட்டும்
இல்லை என்றால்
தேசியம் எங்கே
நிலைக்கப் போகிறது!
குத்துப் பட்டும் சிரிக்கும்
காவியைப்போலே
வெட்டுப் பட்டும் வேதனைப் பட்டும்
தேசியத்தைத் தாங்கி நிற்பீர்…
இந்திய நாட்டின் இந்துக்களே!
தியாகிகளே!



