December 5, 2025, 9:23 PM
26.6 C
Chennai

மன்னார்குடியும் மத்திய அரசும்! ஜெ.வுக்கு மாரடைப்பு ஏற்பட்டது முதல் ராஜாஜி ஹால் வரை!

அப்பல்லோ மருத்துவமனை அறிவிப்பு வந்த அதேநேரத்தில் ஆளுநர் வித்யாசகர் ராவ் அவசரமாக சென்னை வருகிறார் என்கிற செய்தியும் வெளியாகிறது. தேவைப்பட்டால் பிரதமர் மோடியும் சென்னை வருவார் எனவும் கூறப்பட்டது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படாத நேரத்திலும் கூட மத்திய அரசு தரப்பில், தேவைப்பட்டால் துணை ராணுவப் படை அனுப்பப்படும் என்ற பீதியான செய்தி தொடர்ந்து வருகிறது.
சென்னைக்கு வந்து சேர்ந்த பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் நேராக அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றார். ஆனால் போனவேகத்தில் அவர் 10 நிமிடத்திலேயே திரும்பிவிட்டார். அவரிடம் இருந்து அறிக்கை வரும் வரும் என தமிழக மக்கள் எதிர்பார்த்து விடிந்ததுதான் மிச்சம்.
ஆனால் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், வித்யாசாகர் ராவிடம் தமிழக சட்டம் ஒழுங்கு குறித்து பேசியதாக கூறப்பட்டது.. உண்மையில் அப்போது தமிழகம் ஜெயலலிதாவுக்கு என்னாச்சோ என்ற தவிப்புடன் ஆளுநர் அறிக்கைக்காக காத்திருந்தது. மத்திய அரசு தரப்பில் சட்டம் ஒழுங்கு பற்றியே பேசிக் கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெயலலிதா உடல்நிலை குறித்து தமிழகமே எதிர்பார்த்து காத்துகிடக்க அப்பல்லோவில் விடிய விடிய அமைச்சர்களும் சசிகலாவும் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனை ஒருபக்கம் நடக்க தலைமைச் செயலரோ ஆளுநர் வித்யாசாகர் ராவை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து ஒருபக்கம் தவிப்பு இருக்கும் நேரத்தில் அதிகார மையங்கள் இடைவிடாத ஆலோசனைகளில் மூழ்கியிருந்தது.
இப்படி ஒரு இரவு முழுவதும் உருவாக்கப்பட்டிருந்த பீதியான திங்கள்கிழமை காலை சற்றே தணிந்தது. ஜெயலலிதாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுவதாக செய்திகள் வந்து கொண்டிருந்தன… அதே நேரத்தில் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு குறித்தே மீண்டும் மீண்டும் மத்திய அரசு பேசியது. துணை ராணுவப் படையினரை அனுப்புவோம் என்றெல்லாம் மத்திய அரசு தரப்பில் இருந்து சொல்லப்பட்டது.
இந்த அறிவிப்புகளுக்கு நடுவே அதிமுகவின் எம்எல்ஏக்கள் கூட்டம் அப்பல்லோ மருத்துவமனையிலேயே நடத்தப்பட்டது. அதன் பின்னர் ராயப்பேட்டை அதிமுக தலைமை கழகத்தில் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. அத்துடன் எம்எல்ஏக்கள், உதவியாளர்களின் செல்போன்களையும் தங்கள் வசம் எடுத்துக் கொண்டு அவர்களை அதிமுக தலைமை கழகத்திலேயே இருக்கவும் உத்தரவிடப்பட்டது. இப்படி அதிமுகவை கட்டுப்பாட்டில் வைத்திருந்த சசிகலா தரப்பு மும்முரமாக இறங்கியது.
பின்னர் திங்கள்கிழமை பிற்பகல் திடீரென ஜெயலலிதா உடல்நிலை கவலைக்கிடமானது என அறிவிக்கப்பட்டதுதான் தாமதம்.. மத்திய அரசு தம் பங்குக்கு களமிறங்கியது. டெல்லியில் இருந்து எய்ம்ஸ் மருத்துவர்கள் குழுவை மத்திய அரசு அனுப்பி வைத்தது.. உள்துறை அமைச்சர் ராஜ்நாத் மீண்டும் தமிழக சட்ட ஒழுங்கு குறித்து ஆளுநரிடம் பேசினார்… ஆளுநரும் அப்பல்லோவுக்கு வருகிறார் என செய்திகள் வெளியாகின. மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு உடனே சென்னைக்கு புறப்பட்டு வந்தார்.
தமிழக சட்டம் ஒழுங்கு குறித்து மீண்டும் மீண்டும் மத்திய அரசு தரப்பில் இருந்து விளக்கம் கேட்கப்பட்டு வந்தது. இதன் உச்சகட்டமான காட்சிகள்தான் மாலை 5 மணி முதல் 7 மணி வரை நடைபெற்றது. அப்பல்லோவுக்கு வந்த மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு சுமார் 40 நிமிடம் அங்கேயே இருந்தார்.
அப்போது ராயப்பேட்டை அதிமுக தலைமை நிலையத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த கூட்டத்தில் முக்கிய அமைச்சர்கள் ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்க முடியாமல் அப்பல்லோவில் இருப்பதாக கூறப்பட்டது. மத்திய அமைச்சர் வெங்கையா நாயடுவும் அப்பல்லோவில்தான் இருந்தார்.
நீண்டநேரத்துக்குப் பின்னர் அப்பல்லோவில் இருந்து வெங்கையா நாயுடு புறப்பட்டுச் சென்றார். அவர் சென்னையிலேயே தங்கி இருந்து தமிழக நிலவரங்கள் தொடர்பாக பிரதமர் மோடியிடம் விவரித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories