பிகிலு பட போஸ்டர்… இறைச்சி வியாபாரிகள் டர்ர்ர்ர்…! காரணம் என்ன தெரியுமா?!

coimbatore protest - 2026
பிகில் படத்திற்கு எதிராக போராட்டம்

பிகில் திரைப்படத்தில் இறைச்சி வெட்டும் கட்டை மீது கால் வைத்து நடிகர் விஜய் இறைச்சி வியாபாரிகளை இழிவு படுத்தியதாக கூறப்படும் புகைப்படங்களை கிழித்து கோவையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இறைச்சி வியாபாரிகள் போராட்டம் நடத்தினர்.

பிகிலு திரைப்படம் நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகிறது. இதில், கால்பந்தாட்டத்தை மையமாகக் கொண்டு கதைக்களன் அமைக்கப் பட்டிருக்கிறது.

விஜய் நடித்துள்ள பிகில் திரைப்படத்தின் போஸ்டர்களில், இளமையான தோற்றத்தில் இருக்கும் விஜய், கால்பந்தை தூக்கிப் போட்டபடி போஸ் கொடுக்கிறார். இன்னொரு விஜய், ஆத்திரத்துடன் கத்தி செருகப்பட்ட இறைச்சி வெட்டும் மரக்கட்டை மீது கால் வைத்தபடி ஒரு சேரில் அமர்ந்திருப்பார். அந்தப் படம் தற்போது இறைச்சி வியாபாரிகளிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இறைச்சி வெட்டும் மரக்கட்டை மீது கால் வைத்து நடிகர் விஜய் தங்கள் தொழிலை இழிவுபடுத்தி விட்டதாகக் கூறி பிகில் பட சுவரொட்டியைக் கிழித்து, கோவை ஆட்சியர் அலுவலகம் முன் இறைச்சி வியாபாரிகள் போராட்டம் நடத்தினர்.

coimbatore bigil - 2026

தாங்கள் தெய்வமாக மதிக்கும் இறைச்சி வெட்டும் மரக்கட்டை மீது காலணி அணிந்து மிதித்தபடி, கால் வைத்து போஸ் கொடுப்பதா என்று அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக கோவை ஆட்சியர் அலுவலகம் முன் திரண்ட அவர்கள், பிகில் போஸ்டர்களைக் கிழித்தனர்.

ALSO READ:  மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

சர்ச்சைக்குரிய இந்த போஸ்டர் தொடர்பாக ஏ.ஜி.எஸ். நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியதாகவும், ஆனால் அந்த போஸ்டரில் உள்ள கேரக்டரின் செயலை நியாயப்படுத்துவது போல் தங்களுக்கு பதில் கிடைத்ததாகவும் கூறுகின்றனர். அது தங்களது ஆத்திரத்தை அதிகப்படுத்தி உள்ளதாகக் கூறிய இறைச்சி வியாபாரிகள், இந்தக் காட்சியை படத்தில் இருந்து நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை எடுப்போம் என்று கூறினர்.

இறைச்சி வெட்டும் மரக்கட்டை இறைச்சி வியாபாரிகளுக்கு தெய்வம் என்றால், எந்த இறைச்சிக்காக ஆடும் மாடும் வெட்டப் படுகிறதோ அந்த ஆடும் மாடும் எங்களுக்கு தெய்வம்தானே என்று சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ALSO READ:  குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

Topics

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

Entertainment News

Popular Categories