பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாகத் திரளும் எம்.எல்.ஏ.க்கள்!

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் யார் என்ற கேள்வி பிரம்மாண்டமாக எழுந்தது.

முதல்வராக ஓ.பி.எஸ். பொறுப்பேற்ற நிலையில், பொதுச்செயலாளராக சசிகலா காய் நகர்த்தி வருகிறார்.

அ.தி.மு.கவின் இரண்டாம் கட்டதலைவர்கள், சசிகலாவை பொதுச்செயலாளராக பொறுப்பேற்கும்படி கோரிக்கை வைத்தார்கள்.

இன்னும் ஒருபடி மேலே போய், சசிகலாவே முதல்வராக வேர வேண்டும் என்றும் சிலர் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுக்குழு செயற்குழு கூட இருக்கிறது. இதில் பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்படுவார்.

இதற்கிடையே, முதல்வர் ஓ.பி.எஸ்., சசிகலாவுக்கு எதிராக அணி சேர்க்கத்துவங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆளுங்கட்சி எம்.எல்.ஏக்களிடம் சிலர் இப்போது ஓ.பி.எஸ்ஸுக்கு ஆதரவாக கேன்வாஸ் செய்து வருகிறார்கள்.

“இதுவரை நாம் சம்பாத்தித்ததை எல்லாம், அம்மா பெயரச் சொல்லி, சசிகலாவே பிடுங்கிக்கொண்டார். தவிர நம்மை அடிமையிலும் அடிமையாக நடத்தினார்.

இனியும் அப்படி நடக்கக்கூடாது. நாம் ஒற்றுமையாக இருந்து ஓ.பி.எஸ்ஸை ஆதரிக்க வேண்டும். மீதி இருககும் ஆட்சிக் காலத்தில் நியாயமான(!) கமிசன் கொடுத்தால் போதும்.

ஓ.பி.எஸ்ஸுக்கு மத்திய பாஜக அரசின் ஆதரவு இருக்கிறது. ஆகவே நாம் சசிகலாவுக்கோ அவரது குடும்பத்தினருக்கோ பயப்பட வேண்டியதில்லை. தவிர, சொத்துக்குவிப்பு வழக்கு விரைவில் வரப்போகிறது.

சசிகலாவும் மற்றவர்களும் சிறைக்குச் செல்லப்போவது உறுதி.” என்று இவர்கள் கூறி எம்.எல்.ஏக்களிடம் ஆதரவு தெரவித்து வருகிறார்கள்.

ஏற்கெனவே சசிகலா மற்றும் அவர் குடும்பத்தினர் மீது கடும் அதிருப்தியில் இருந்த எம்.எல்.ஏக்கள் வெளியில் ஏதும் சொல்ல முடியாத நிலையில் இருந்தார்கள்.

தற்போது தங்கள் ஆத்திரத்தை வெளிக்காட்ட வாய்ப்பு கிடைத்திருப்பதால், பெரும்பாலான.. அதாவது 90 சதவிகித எம்.எல்.ஏக்கள் ஓ.பி.எஸ்ஸுக்கு ஆதரவளிக்க ஒப்புக்கொண்டுள்ளார்கள்.

அதே போல அ.தி.மு.க. எம்.பிக்களில் பெரும்பாலோரும் ஓ.பி.எஸ்ஸுக்கு ஆதரவாக மாறிவிட்டார்கள்.

அதிகார பலம் கொண்ட, எம்.பி, எம்.எல்.ஏக்கள் ஓ.பி.எஸ். பக்கம் வந்ததால் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களை வளைப்பது எளிது என்பதால், முதலில் இந்த கேன்வாஸ் நடந்தது.

ஆனால், கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களில் பெரும்பாலோர் ஏற்கெனவே சசிகலா எதிர்ப்பில் உறுதியாக இருக்கிறார்கள். ஆனால், தகுந்த தலைமை இல்லாததால் அவர்கள் வெளிப்படையாக அணிதிரளவில்லை.

இப்போது ஓ.பி.எஸ். தயாராக இருப்பதால் அவரது தலைமையின் கீழ் இயங்க அவர்கள் தயாராக இருக்கிறார்கள். அவர்களிடம், “பொதுக்குழு கூடும் வரை அமைதியாக இருங்கள். கூட்டத்தில் பார்த்துக்கொள்ளலாம்” என ஓ.பி.எஸ். சார்பில் சொல்லப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories