காவி என்றால் பயங்கரவாதம் என்பவர்களுக்கு ரஜினி கொடுத்த சவுக்கடி: அர்ஜூன் சம்பத்!

rajini - 2026

காவி என்றால் பயங்கரவாதம் என்பவர்களுக்கு தக்க பதிலடியை ரஜினிகாந்த் அளித்திருப்பதாக, இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.

இன்று (நவம்பர் 8) காலை சென்னையில் கமல் அலுவலகத்தில் நடைபெற்ற மறைந்த இயக்குநர் பாலசந்தர் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்டார் ரஜினி. இதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, “எனக்குக் காவி சாயம் பூச முயற்சி நடக்கிறது. அது நடக்காது. பாஜக எனக்கு எவ்வித அழைப்பும் விடுக்கவில்லை” எனத் தெரிவித்தார்.

இதுதொடர்பாக, தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த அர்ஜுன் சம்பத், “ரஜினிகாந்த் மிகத் தெளிவாக நெற்றிப்பொட்டில் அடித்தாற் போன்று காவிச்சாயம் பூசுவது குறித்து பதிலளித்திருக்கிறார். காவி என்கிற நிறத்திற்கு மதம் கிடையாது. சாதி கிடையாது. காவி என்பது ஆன்மிகத்தின் அடையாளம்.

arjun sampath - 2026

இந்து சமயம், இந்து தர்மம் என்று தான் சொல்வோம். சைவம், வைணவம் என பல்வேறு விதமான சம்பிரதாயங்கள் இருக்கின்றன. இங்கு மதம் என்பது எப்போதும் இருந்தது கிடையாது. திருக்குறளுக்கு மதம் கிடையாது, பகவத் கீதைக்கு மதம் கிடையாது. தேவாரம், திருவாசகத்துக்கும் மதம் கிடையாது.

எங்களுடையது ஒரு கலாச்சாரம், பண்பாடு. இது, மனதைப் பக்குவப்படுத்தக்கூடிய சமயம். ஆன்மிக அரசியலுக்கு சாதி, மதம் கிடையாது.

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலிருந்து எங்கள் மீது மதவாத முத்திரையை தொடர்ந்து குத்துகின்றனர். காங்கிரஸ் கட்சி எங்களை காவி மதவாதி, காவி பயங்கரவாதம் என்றனர். காவிக்கு என்ன மதம்? விவேகானந்தருக்கு என்ன மதம்? ரஜினி பாபா முத்திரையைக் காட்டுவதை மதவாதம் என்பார்களா? நாங்கள் மதத்திற்கு அப்பாற்பட்டவர்கள். எங்களை மதவாதி எனக்கூறி தனிமைப்படுத்தும் முயற்சியில் சில சக்திகள் ஈடுபடுகின்றனர்.

குத்து விளக்கு ஏற்றுவதை மதவாதம் என சொல்ல முடியுமா? அரசு விழாக்களில் குத்து விளக்கு ஏற்றினால், மதவாத அரசு என்பார்களா? தமிழக அரசு கோபுர சின்னத்தைக் கொண்டுள்ளது. அதனை மதவாத சின்னமாகப் பார்க்க முடியுமா? வள்ளுவர் கோயிலையே இந்து சமய அறநிலையத்துறைதான் நடத்துகிறது.

காவி என்றால் மதம், பயங்கரவாதம், தீவிரவாதம் என முத்திரை குத்துபவர்களுக்கு தக்க பதிலடியை ரஜினி கொடுத்திருக்கிறார்” என்று அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories