ஜல்லிக்கட்டு கலவரத்தில் ஆட்டோ எரித்த பெண் போலீஸ் அடையாளம் தெரிந்தது!

சென்னை:

சென்னை, தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கடந்த 17-ந்தேதி மாணவர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனை தொடர்ந்து தமிழக அரசு ஜல்லிக்கட்டு போட்டிக்கான தடையை நீக்கும் வகையில் அவசர சட்டத்தை கடந்த 23-ந்தேதி கொண்டு வந்தது. அதன் பின்னரும் மாணவர்கள் நடத்திய போராட்டம் முடிவுக்கு வரவில்லை. இதனால் மெரினாவில் குவிந்திருந்த மாணவர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் ஐஸ் அவுஸ், திருவல்லிக்கேணி, அரும்பாக்கம், கோயம்பேடு, வியாசர்பாடி உள்ளிட்ட இடங்களில் கலவரம் வெடித்தது. இந்த போராட்டத்தின் உச்சக்கட்டமாக ஐஸ்அவுஸ் போலீஸ் நிலையம் தீ வைத்து கொளுத்தப்பட்டது.

மெரினாவில் நடந்த மாணவர்கள் போராட்டத்தில் எந்தவித வன்முறை சம்பவங்களும நடைபெறாத நிலையில், அவர்களுக்கு ஆதரவாக நடந்த போராட்டங்களிலேயே சமூக விரோத கும்பல் ஊடுருவி பெரும் கலவரத்தை ஏற்படுத்தியது. போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. போலீஸ் வாகனங்கள் நொறுக்கப்பட்டதுடன் தீ வைப்பு சம்பவங்களும் அரங்கேறின. இதனால் கடந்த திங்கட்கிழமை சென்னை மாநகரில் பல இடங்கள் போர்க்களம் போல காட்சி அளித்தன.

இதனிடையே கலவரத்தை பயன்படுத்தி போலீசாரே வாகனங்களுக்கு தீ வைத்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதனை உறுதிப்படுத்தும் வகையில் பெண் போலீஸ் ஒருவர் ஆட்டோவுக்கு தீ வைக்கும் காட்சியும், போலீஸ்காரர் ஒருவர் வாகனங்களை லத்தியால் அடித்து நொறுக்கும் காட்சிகளும் வீடியோ பதிவுகளாக பரவின. வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவிய இது போன்ற வீடியோக்கள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தின.

இது தொடர்பாக பேட்டி அளித்த சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், போலீசார் தவறு செய்திருந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்திருந்தார். இதைத் தொடர்ந்து சென்னையில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். கலவரத்தில் ஈடுபட்ட 300 பேர் வரை இதுவரைகைது செய் யப்பட்டுள்ளனர். மேலும் பலரைத் தேடி வருகிறார்கள்.

கலவரத்தை பயன்படுத்தி தீ வைப்பு சம்பவத்தில் ஈடுபட்ட பெண் போலீஸ் மீதும், வாகனங்களை சேதப்படுத்திய போலீஸ்காரர் மீதும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இதில் இவர்கள் இருவரும் அடையாளம் காணப்பட்டனர்.

இது தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவிய வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் பெண் போலீசும், போலீஸ்காரரும், யார் என்பதை உயர் போலீஸ் அதிகாரிகள் கண்டு பிடித்துள்ளனர். இவர்கள் 2 பேர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. பெண் போலீஸாரும், போலீஸ்காரரும் சஸ்பெண்டு செய்யப்படுவார்கள் என்று தெரிகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

பஞ்சாங்கம் – மார்ச் 11 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

பஞ்சாங்கம் – மார்ச் 11 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘அடிச்சி விடு’ புகழ், இப்போ ‘செல்லத் தட்டல்’ சேகர்பாபு ஆகிவிட்டார்: அண்ணாமலை கிண்டல்!

அது என்ன, திமுக தலைவர்கள் மட்டும் சாதாரண பொதுமக்களை அன்பாகத் தட்டிக் கொடுக்கும்போதெல்லாம், முகத்தை அப்படி கோபமாக வைத்துக் கொள்கிறீர்கள்?

தமிழகத்தில் இருந்த நாட்கள் பொற்கால நாட்கள்: ஆளுநர் ஆர்.என். ரவி உருக்கம்!

தமிழக மக்களுடன் கலந்து பழகிய 54 மாதங்கள் தம் வாழ்வின் பொற்கால நாட்கள் என்று தமிழக ஆளுநர் ஆர்என். ரவி உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

இக்கணம் – தேவை சிக்கனம்!

மத்திய கிழக்கில் போர் ஏற்பட்டதில் இருந்தே உலகின் பல நாடுகளிலும் பெட்ரோல் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட தொடங்கியது…

Entertainment News

Popular Categories