December 5, 2025, 9:39 PM
26.6 C
Chennai

வைரமுத்துவுக்கு ‘பட்டம்; கொடுக்க வருவதா? இந்துக்களின் எழுச்சியால்… ராஜ்நாத் சிங் வருகை ரத்து!?

15 July12 Rajnath singh - 2025

எஸ்.ஆர்.எம். பல்கலை., ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில், சினிமா பாடலாசிரியர் வைரமுத்துவுக்கு டாக்டர் பட்டம் கொடுப்பதற்காக மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்னைக்கு நாளை வருவதாக இருந்தது. ஆனால், இந்த நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் கலந்து கொள்வதற்கு இந்து அமைப்பினர், இயக்கத்தினர், தமிழக பாஜக.,வினர் என பல தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியதால், மத்திய அமைச்சரின் வருகை ரத்து செய்யப் பட்டிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

மத்தவங்க கொடுத்தா பட்டம்; நமக்கு நாமே கொடுத்துக்கிட்டா தம்பட்டம்! என்று ஒரு வசனம் உண்டு. சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலை.,க்கழகத்தின் சார்பில் அதன் நிறுவுனர் தற்போதைய எம்.பி., பச்சைமுத்து ஏற்பாட்டில் சினிமா பாடலாசிரியர் வைரமுத்துவுக்கு டாக்டர் பட்டம் வழங்கப் போவதாக செய்தி வெளியானது. அந்த நிகழ்ச்சியில் மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் கலந்து கொள்வதாக இருந்தது. .

ஆனால், இந்துக்களின் இறைவன் ராமபிரானையும், தாயார் ஆண்டாளையும் இழிவுபடுத்தி பேசிய வைரமுத்துவுக்கு பட்டம் வழங்க ராஜ்நாத் சிங் வருவதா என்று கண்டனங்கள் எழுந்தன.

இதை அடுத்து, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட அமைப்புகள் கண்டனக் குரல் எழுப்பின. எஸ்.ஆர்.எம். பல்கலை முன் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப் படும் என்று கூறின.

ராமர் அவதார புருஷன் அல்ல. அவன் கர்ப்பத்தில் உதித்தவன், ஆகையால் அவன் கடவுள் அல்ல
என்று இஸ்லாமிய கூட்டத்தில் பேசியவன் வைரமுத்து. இத்துடன் ஆண்டாள் நாச்சியாரையும் , அவமதித்ததையும் சேர்த்துக்கொள்ளவும்..
இந்து மதம் கடவுள்கள், பாஜக ,மோடி எல்லோரையும் அவமதித்து பேசியவன் தகரமுத்து..
ஆனால் இவனுக்கு விருது மட்டும்
பாஜகவை சேர்ந்த மத்திய அமைச்சர் கொடுக்க வேண்டுமா? கஞ்சா கவிஞனை உனது அழிவு சீக்கிரம்.

  • என்ற ரீதியில் சமூகத் தளங்களிலும் கருத்துகள் பரவின.

இந்நிலையில், நிகழ்ச்சியினால் ஏற்படும் விபரீதத்தை உணர்ந்து, ராஜ்நாத் சிங்கின் பயணம் ரத்து செய்யப் பட்டிருப்பதாகவும், ராஜ்நாத் சிங், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாட்டார் என்றும் பாஜக.,வினர் தெரிவித்தனர். .

பச்சைமுத்து 2014ல் தேர்தல் நேரத்தில் அப்போது பாஜக., தலைவராக இருந்த ராஜ்நாத் சிங்குடன் நேரடியாக பேசி பழகியவர் என்றும், அந்த பழக்கத்தின் அடிப்படையில், வைரமுத்துவுக்கு சரிந்து போன இமேஜை மீண்டும் தூக்கிப் பிடிக்க ராஜ்நாத் சிங் மூலமே முயற்சியை அவர் மேற்கொண்டார் என்றும் கூறப் படுகிறது. இந்நிலையில் தமிழக பாஜக.,வினரின் எதிர்ப்பால், பச்சைமுத்துவின் முயற்சிக்கு முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளதாக தமிழக பாஜக.,வினர் கூறுகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories