வைரமுத்துவுக்கு ‘பட்டம்; கொடுக்க வருவதா? இந்துக்களின் எழுச்சியால்… ராஜ்நாத் சிங் வருகை ரத்து!?

15 July12 Rajnath singh - 2026

எஸ்.ஆர்.எம். பல்கலை., ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில், சினிமா பாடலாசிரியர் வைரமுத்துவுக்கு டாக்டர் பட்டம் கொடுப்பதற்காக மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்னைக்கு நாளை வருவதாக இருந்தது. ஆனால், இந்த நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் கலந்து கொள்வதற்கு இந்து அமைப்பினர், இயக்கத்தினர், தமிழக பாஜக.,வினர் என பல தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியதால், மத்திய அமைச்சரின் வருகை ரத்து செய்யப் பட்டிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

மத்தவங்க கொடுத்தா பட்டம்; நமக்கு நாமே கொடுத்துக்கிட்டா தம்பட்டம்! என்று ஒரு வசனம் உண்டு. சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலை.,க்கழகத்தின் சார்பில் அதன் நிறுவுனர் தற்போதைய எம்.பி., பச்சைமுத்து ஏற்பாட்டில் சினிமா பாடலாசிரியர் வைரமுத்துவுக்கு டாக்டர் பட்டம் வழங்கப் போவதாக செய்தி வெளியானது. அந்த நிகழ்ச்சியில் மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் கலந்து கொள்வதாக இருந்தது. .

ஆனால், இந்துக்களின் இறைவன் ராமபிரானையும், தாயார் ஆண்டாளையும் இழிவுபடுத்தி பேசிய வைரமுத்துவுக்கு பட்டம் வழங்க ராஜ்நாத் சிங் வருவதா என்று கண்டனங்கள் எழுந்தன.

இதை அடுத்து, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட அமைப்புகள் கண்டனக் குரல் எழுப்பின. எஸ்.ஆர்.எம். பல்கலை முன் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப் படும் என்று கூறின.

ராமர் அவதார புருஷன் அல்ல. அவன் கர்ப்பத்தில் உதித்தவன், ஆகையால் அவன் கடவுள் அல்ல
என்று இஸ்லாமிய கூட்டத்தில் பேசியவன் வைரமுத்து. இத்துடன் ஆண்டாள் நாச்சியாரையும் , அவமதித்ததையும் சேர்த்துக்கொள்ளவும்..
இந்து மதம் கடவுள்கள், பாஜக ,மோடி எல்லோரையும் அவமதித்து பேசியவன் தகரமுத்து..
ஆனால் இவனுக்கு விருது மட்டும்
பாஜகவை சேர்ந்த மத்திய அமைச்சர் கொடுக்க வேண்டுமா? கஞ்சா கவிஞனை உனது அழிவு சீக்கிரம்.

  • என்ற ரீதியில் சமூகத் தளங்களிலும் கருத்துகள் பரவின.

இந்நிலையில், நிகழ்ச்சியினால் ஏற்படும் விபரீதத்தை உணர்ந்து, ராஜ்நாத் சிங்கின் பயணம் ரத்து செய்யப் பட்டிருப்பதாகவும், ராஜ்நாத் சிங், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாட்டார் என்றும் பாஜக.,வினர் தெரிவித்தனர். .

பச்சைமுத்து 2014ல் தேர்தல் நேரத்தில் அப்போது பாஜக., தலைவராக இருந்த ராஜ்நாத் சிங்குடன் நேரடியாக பேசி பழகியவர் என்றும், அந்த பழக்கத்தின் அடிப்படையில், வைரமுத்துவுக்கு சரிந்து போன இமேஜை மீண்டும் தூக்கிப் பிடிக்க ராஜ்நாத் சிங் மூலமே முயற்சியை அவர் மேற்கொண்டார் என்றும் கூறப் படுகிறது. இந்நிலையில் தமிழக பாஜக.,வினரின் எதிர்ப்பால், பச்சைமுத்துவின் முயற்சிக்கு முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளதாக தமிழக பாஜக.,வினர் கூறுகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories