வருகிற 15ந் தேதி முதல் 19ந் தேதி வரை 5 நாட்கள் ரசிகர்களை சந்தித்து தனித்தனியாக போட்டோ எடுத்துக் கொள்ள இருக்கிறார்.
இந்த 5 நாட்களும் திருச்சி, திண்டுக்கல், கரூர், அரியலூர், தஞ்சாவூர், விழுப்புரம் மாவட்ட ரசிகர்களை சந்திக்கிறார். மற்ற மாவட்டங்களுக்கான தேதி பின்னர் ஒதுக்கப்படும் என்று தெரிகிறது.
இந்த சந்திப்பு நிகழ்ச்சி சென்னை ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் நடக்கிறது. இதற்காக அந்தந்த மாவட்ட நிர்வாகிகளுக்கு கடிதம் அனுப்ப்பட்டுள்ளதாக ரஜினி ரசிகர் மன்ற வட்டார தகவல்கள் தெரிவிக்கிறது