பூங்காவில் இலவச வைஃபை! அதிரடி காட்டும் மதுரை மாநகராட்சி!

wifi - 2026

தென் தமிழகத்திலேயே முதல் முறையாக மதுரை மாநகராட்சியில் ‘பூங்கா’க்களில் இலவச வைஃபை நெட் வொர்க் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஒரு நபர் ஒரு நாளைக்கு இந்த வைஃபை வசதியை 45 நிமிடங்கள் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் செயல்படுத்தப்படுகிறது. போட்டித் தேர்வாளர்களுக்கும், நடைபயிற்சிக்கு வருபவர்களை ஊக்குவிக்கவும் இந்த சேவை அறிமுகப்படுத்தப்படுகிறது.

உடல் ஆரோக்கியத்தை உயிர்ப்புடன் வைத்திருக்க, மூளையில் தொடங்கி இதயம், நுரையீரல், கல்லீரல் வரை அனைத்து உடல் உறுப்புகளும் இடைவிடாமல் ஓடிக்கொண்டேதான் இருக்கின்றன.

ஆனால், அவை அனைத்தையும் தாங்கிப்பிடித்திருக்கும் மனிதர்கள்தான் தற்போது ஓடாமல், நடக்காமல் சொகுசு வாழ்க்கைக்குள் மூழ்கிவிட்டனர்.

உடல் உழைப்பு குறைந்துவிட்ட இன்றைய பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் உடற்பயிற்சி கட்டாயமாக தேவைப்படுகிறது. குறைந்தபட்சம் நடைப்பயிற்சியாவது அவசியமாகிறது. அதைகூட சிலர் செய்யத் தயங்குகின்றனர்.

park - 2026

நடைப்பயிற்சியை சுவாரஸ்யமாக்க பாட்டு கேட்டுக் கொண்டே செய்தி கேட்டு கொண்டோ நடக்கும் வகையில் மதுரை மாநகராட்சிப் பூங்காக்களில் இலவச வைஃபை வசதி அறிமுகப்படுத்தப்படுகிறது.

ALSO READ:  நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

அதனால், உடலை நோயில்லாமல் வைத்திருக்க தற்போது காலை, மாலை நேரங்களில் பூங்காக்களில் நடைப்பயிற்சிக்கு செல்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

மதுரையில் மாநகராட்சி சுற்றுச்சூழல் (ஈக்கோ பார்க்) பூங்கா, வண்டியூர் பூங்காக்களில் தினமும் ஆயிரக்கணக்கானோர் நடைப்பயிற்சி செல்கின்றனர். தொழில் அதிபர்கள், அலுவலகப் பணியாளர்கள், இல்லத்தரசிகள், இளைஞர்கள் என்று பலதரப்பட்ட மனிதர்கள் இந்த பூங்காக்களுக்கு நடைப்பயிற்சிக்கு வருகின்றனர்.

அவர்களை மகிழ்விக்கவும், நடைப்பயிற்சியை ஊக்குவிக்கவும் மாநகராட்சி நிர்வாகம் தென் தமிழகத்திலேயே முதல் முறையாக,மாநகராட்சி ஈக்கோ பூங்கா, வண்டியூர் பூங்காக்களில் தனியார் நிறுவனம் ஒன்றின் உதவியுடன் இலவச வைஃபை வசதியை அறிமுகம் செய்கிறது.

இது குறித்து மாநகராட்சி ஆணையாளர் விசாகன் கூறியதாவது:

தற்போது போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள், பணிபுரியும் ஊழியர்கள், தொழில்முனைவோர்க்கு இணைய வசதி அத்தியாவசியமாகிவிட்டது.

குறிப்பாக போட்டித் தேர்வுக்கு தயாராவோருக்கு சில ‘ஆப்’களை பயன்படுத்திப் படிக்க வேண்டியது இருக்கும். அதனால், மாநகராட்சி வளாகத்தில் படிக்கும் போட்டித் தேர்வாளர்கள் வசதிக்காக ஏசிடி பைபர் நெட் (ACT Fiber Net) தாமாக முன்வந்து இலவசமாக வைஃபை நெட்வொர்க் அமைத்துத் தரவுள்ளது.

ALSO READ:  மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

அதுபோல் உடல் ஆரோக்கியத்திற்காக நடைப்பயிற்சியை ஊக்குவிக்க, மாநகராட்சி பூங்காக்களில் தனியார் நிறுவனங்கள் ஒத்துழைப்புடன், இதே ‘ஏசிடி பைபர் நெட்’ நிறுவனம் உதவியுடன் இலவச வைஃபை நெட்வொர்க் வசதி அமைக்கப்பட உள்ளது.

wifi 2 - 2026

பூங்காக்களில் நடைப்பயிற்சி வருவோர் ஒரு நபர் அதிகப்பட்சம் தனது செல்போனில் 45 நிமிடங்கள் வரை இந்த வைஃபை வசதி பயன்படுத்திக் கொள்ளும் வகையில் வைஃபை டிவைஸ் வடிவமைக்கப்படுகிறது.

வைஃபை வசதியால் நடைப்பயிற்சிக்கு வருவோர், தடையில்லா நெட்வொர்க்கை பயன்படுத்தலாம். முதற்கட்டமாக இந்த வைஃபை வசதியை மாநகராட்சி ஈக்கோபார்க்கில் தொடங்கப்படுகிறது.

அதன்பிறகு வண்டியூர் பூங்காவிலும் தொடர்ந்து படிப்படியாக மற்ற முக்கியமான பூங்காக்களிலும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னையில் ஒரு பூங்காவில் வாக்கிங் செல்வோருக்காக இலவச வைஃப் வசதி செய்யப்பட்டுள்ளது. அதன்பிறகு மதுரை மாநகாட்சி பூங்காக்களில் தான் இந்த வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாநகராட்சியில் 64 பள்ளிகள் உள்ளன. இதல், 34 பள்ளிகள் வரை இலவச வைஃபை வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மணிப்பூர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

Entertainment News

Popular Categories