December 5, 2025, 10:03 PM
26.6 C
Chennai

திருவிழாகளில் திருடியே ரிச் ஆன சகோதரிகள்!

thiruttu - 2025

கோவை கோணியம்மன் கோவில் தேர்திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு தேர் திருவிழா நடந்தது. இதில் இந்துமதி, பராசக்தி மற்றும் செல்வி ஆகிய மூன்று சகோதரிகள் சேர்ந்து கோயிலுக்கு வந்த பெண்களின் நகைகளை திருடியுள்ளனர்.

அப்போது சிசிடிவி காட்சிகள் மூலம் கையும் களவுமாக காவல்துறையினரிடம் இவர்கள் சிக்கி உள்ளனர். இதுகுறித்து அவர்கள் அளித்த வாக்குமூலத்தில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளன.

அதாவது, சகோதரிகள் மூவரும் சேர்ந்து பல கோயில் திருவிழாக்களில் கைவரிசை காட்டியுள்ளனர். இதில் கிடைத்த வருமானத்தில் சென்னை திருவான்மியூரில் சொந்தமாக வீடே கட்டியுள்ள அளவிற்கு இவர்களின் தொழில் அமோகமாக இருந்துள்ளது.

திருமணத்திற்குப் பின்னர் பராசக்தி இலங்கையிலும், செல்வி கணவருடன் லண்டனுக்கும், இந்துமதி கணவருடன் கேரள மாநிலத்திற்கும் இடம் பெயர்ந்துள்ளனர். திருமணமாகி செட்டில் ஆனபோதிலும் திருடும் பழக்கம் மட்டும் இன்னும் அவர்களிடமிருந்து செல்லவில்லை.

இதனால் தொடர்ந்து திருட்டு தொழிலில் ஈடுபட்ட இவர்களுக்கு இந்துமதியின் கணவர் பாண்டியராஜன் தான் பிளான் போட்டு கொடுப்பாராம். அதாவது ஆன்லைனில் எந்தெந்த ஊர்களில் திருவிழா என்பதை அறிந்து விஷயத்தை சொல்ல சுற்றுலா விசாவில் விமானத்தை பிடித்து இருவரும் சம்பவ இடத்திற்கு வந்து விடுவார்களாம்.

robbery 1 - 2025

பின்னர் இந்துமதியும் பாண்டியராஜனும் வர நால்வரும் கோவிலின் அருகில் ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கி நோட்டமிட்டு பின்னர் கைவரிசை காட்ட ஆரம்பித்து விடுவார்களாம்

ஒரு கோயில் திருழாவில் மட்டும் 100 சவரன் நகைகளை அபேஸ் செய்யும் இந்த கில்லாடி சகோதரிகள் அதை பாண்டியராஜனிடம் கொடுத்து விற்று பங்கை பிரித்துக்கொண்டு மீண்டும் ஊர்களுக்கு சென்றுவிடுவார்களாம்.

கடந்த மாதம் பழனியில் தொடங்கி திருச்செந்தூரில் திருடி விட்டு கோவைக்கு வந்த போது தான் இவர்கள் சிக்கியுள்ளார்கள். அவர்களிடமிருந்து 35 சவரன் நகைகள் கைப்பற்றப்பட்ட நிலையில் 15 சவரன் நகைகளுடன் பாண்டியராஜன் தப்பி சென்று விட்டார்.

இதை தொடர்ந்து திருட்டு சகோதரிகள் மூவரையும் கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தப்பியோடிய பாண்டியராஜனை தேடி வருகிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories