144: அதிகரித்த குடும்ப வன்முறைக்கு ஆன்லைன் கவுன்சிலிங்!

family vailence 1

குடும்ப வன்முறை தொடர்பான ஆன்லைன் புகார்களைப் பெறுவதில் சென்னை முதலிடத்திலும், திருச்சி, தேனி அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளது.

தமிழகத்தில் கிராமங்களைத் தவிர்த்து, நகரங்களில் அன்றாடம் வேலைக்குச் செல்லும் பெரும்பாலான ஆண்களும், பெண்களும் விடுமுறை நாட்கள் தவிர, மற்ற நாட்களில் இரவு நேரத்தில் மட்டுமே குடும்பத்தினருடன் சில மணி நேரம் கூடியிருக்கும் சூழல் உள்ளது.

தற்போது கொரோனா வைரஸ் தடுப்பு ஊடரங்கினால் கணவன், மனைவி, குழந்தைகள், பெரியவர்களுடன் அனைவரும் வீட்டுக்குள் முடங்கி இருக்கின்றனர்.

இது நல்தொரு சந்தர்ப்பம் என்றாலும், கணவன், மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் ஏற்படும் கருத்து மோதல், குடும்ப பிரச்சினைக்கான தீர்வுக்கு பெண்கள் வெளியில் காவல் நிலையத்தையோ, உறவினர்களையோ அணுக முடியாது.
இச்சூழலில் குடும்ப வன்முறை குறித்த புகார்களை ஆன்லைனில் தெரிவித்து, தீர்வுகளைக் காண தேசிய, மாநில சமூக நலவாரியம் மாவட்டந்தோறும் கவுன்சிலர்களை (உளவியலாளர்) நியமித்துள்ளது.

மதுரை மாவட்டத்தில் திருமங்கலம் பகுதிக்கு நாகராஜன் (81248-10000), சோழவந்தான் பகுதிக்கு அந்தோனி சர்மிளா (81247-10000), சமயநல்லூர் பகுதிக்கு கண்மணி (9894558205) உட்பட தமிழகம் முழுவதும் 35-க்கும்மேற்பட்ட கவுன்சிலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் ஊரடங்கு காலத்தில் கணவன்- மனைவி இடையே பொருளாதார நெருக்கடி தொடங்கி டிவி சேனல் மாற்றுவது உள்ளிட்ட பிரச்சினை வரை ஏற்படும் குடும்ப வன்முறை தொடர்பான புகார்களை ஆன்லைனில் மூலம் பெற்று, அதற்கான தீர்வையும் ஆன்லைன் வழியாகவே அளிக்கின்றனர்.

தீர்க்க முடியாத சில புகார்களுக்கு மகளிர் காவல் நிலையங்களுக்கு தகவல் தெரிவித்து, மகளிர் காவலர்கள் மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் மூலமும் தீர்க்க ஏற்பாடு செய்கின்றனர்.

ஒவ்வொரு கவுன்சிலருக்கும் சரசாரியாக தினமும் 3 முதல் 5 புகார்கள் என தமிழகளவில் தினந்தோறும் 45-50 புகார்கள் வருவதாகவும், இதுவரை 1800-க்கும் மேற்பட்ட புகார்களைப் பெற்று உடனுக்குடன் உரிய வகையில் கவுன்சிலிங் அளித்து தீர்க்கப் பட்டதாகவும் கவுன்சிலர்கள் தெரிவிக்கின்றனர்.

கவுன்சிலர் நாகராஜன் கூறுகையில், ”கொரோனா ஊடரங்கின்போது, குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஓரிடத்தில் கூடியிருப்பதால் ஏதாவது சிறு, சிறு பிரச்னை உருவாகிறது. இருப்பினும், பெரும்பாலும் பண நெருக்கடி, மது குடிக்காமல் ஏற்படும் மன உளைச்சலில் குடும்பத்தில் தகராறு, மாமியார், மருமகள் பிரச்னை குறித்த புகார்களே அதிகரிக்கிறது.

ஊரடங்கு நேரத்தில் நாங்கள் கொடுக்கும் அறிவுரைகளைப் பெரும்பாலும் ஏற்று அமைதியாகின்றனர். தற்போதைக்கு சென்னை முதலிடத்திலும், அடுத்து திருச்சி, தேனியிலும் புகார் அதிகரிக்கிறது. புகாருக்கு கவுன்சிலிங் அளிக்க எந்தநேரத்திலும் தயாராக இருக்கிறோம்,” என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories