என்னை கொலை செய்து விடு.. மனைவியிடம் கதறும் கணவன்! மன உளைச்சலில் குடும்பம்!

trichy

திருச்சி மாவட்டம், சமயபுரம் இந்திரா காலனியில் வசிக்கும் முருகன் (45) பைக்கில் சென்று டீ விற்பனை செய்து வந்தார். இவருக்கு வனஜா என்ற மனைவியும், 15 வயதிற்குட்பட்ட இரண்டு மகள்களும் உள்ளனர். முருகனுக்கு கடந்த 10 வருடங்களுக்கு மேல் இருதய வால்வு கோளாறும், தற்போது கிட்னி கோளாறும், கண் பார்வை குறைபாடும் உள்ளன.

இந்த கடுமையான நோய்களுடனும் குடும்பத்திற்காக முருகன் வாரச் சந்தையில் டீ, சூப், உளுந்தங்கஞ்சி போன்றவைகளை கேன்களில் வைத்து வியாபாரம் செய்து வந்துள்ளார்.

தனக்கு இருக்கும் நோய்கள் தொடர்பாக சென்னை, மதுரை, பாண்டிச்சேரி உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளார். ஆனால் எங்கும் பலனில்லை. கடந்த 3 வருடங்களாக முருகன் வீட்டிலேயே படுக்கையில் இருப்பதால், குடும்ப வறுமையை அவரது மனைவி வனஜா டீ வியாபாரம் செய்து வந்துள்ளார். சிறுக, சிறுக சேமித்த பணத்தை கொண்டு முருகனுக்கு வைத்தியம் பார்த்து வந்துள்ளார்.

trichy i

ஆனால் முருகனின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை. தற்போது ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பட்டுள்ளதால், சாப்பிடுவதற்கே பணமின்றி முருகனின் குடும்பத்தினர் திண்டாடி வருகின்றனர்.

இந்த சூழலிலும் கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி திருச்சி அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக முருகனை அழைத்து சென்றுள்ளனர். அங்கு கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மற்ற நோயாளிகளை பார்க்கவில்லை என்றும், கொரோனா நோயாளிக்கு மட்டும் சிகிச்சை அளிப்பதாக கூறி அனுப்பியுள்ளனர்.

இதனால் வேறு வழியின்றி மருந்து கூட வாங்காமல் முருகனை அழைத்துக்கொண்டு அவரது குடும்பத்தினர் வீடு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில், முருகனின் உடல்நிலை மேலும் மோசமாகிக் கொண்டே வருகிறது. தன்னால் தனது குடும்பம் படும் துயரத்தை கண்ட முருகன், தன்னை கருணை கொலை செய்துவிடுமாறு கூறி தனது மனைவியிடம் அழுதுள்ளார். இதனால் மனைவி மற்றும் இரு மகள்களும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

வருமானமின்றி மிகுந்த சிரமத்தில் உள்ளோம். என் கணவருக்கு தமிழக அரசு மருத்துவ உதவி செய்து காப்பாற்ற வேண்டும். என் மகள்களின் எதிர்காலத்திற்க்கு அரசு உதவி செய்ய வேண்டும் என கண்ணீருடன் வனஜா கோரிக்கை வைத்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தமிழக முதல் அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ஜோசப் விஜய்!

இதனால் வரும் 13ம் தேதிக்குள் ஜோசப் விஜய் தனது பெரும்பான்மையை அவையில் நிரூபிக்க வேண்டும். மே 11 அன்று, எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

Topics

தமிழக முதல் அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ஜோசப் விஜய்!

இதனால் வரும் 13ம் தேதிக்குள் ஜோசப் விஜய் தனது பெரும்பான்மையை அவையில் நிரூபிக்க வேண்டும். மே 11 அன்று, எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories