பஜ்ஜி கடையை மூட எதிர்ப்பு: போக்குவரத்தற்ற சாலையில் மறியலில் ஈடுபட்ட முஸ்லிம்கள்!

tiruppur protest1
tiruppur protest1
  • #திருப்பூர் பெரிய தோட்டம் பகுதியில் காவல் துறையினரை கண்டித்து முஸ்லீம்கள் திடீர் ஆர்ப்பாட்டம்…
  • மாலை நேரத்தில் வடை,போண்டா கடையை மூட வேண்டும் என காவல் துறையினர் சொன்னதால் கொந்தளிப்பான இஸ்லாமியர்கள்…
  • மேலும் நோன்பு கஞ்சி காய்ச்சி வழங்குவதற்கும் அனுமதி வேண்டுமாம்…

திருப்பூர் பெரிய தோட்டம் பகுதியில் சாலை மறியலில் பொதுமக்கள் ஈடுபட்டனர். கட்டுப்பாட்டு மண்டலப் பகுதியில் பஜ்ஜி கடையை மூட எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

திருப்பூர் பெரிய தோட்டம் கட்டுப்பாட்டு மண்டல பகுதியாக அறிவிக்கப்பட்டு அங்கு உள்ள சாலைகள் அடைக்கப்பட்டுள்ளன. போலீசார் அப்பகுதியை கண்காணித்து வருகின்றனர். இந்த கட்டுப்பாட்டு மண்டலப் பகுதியில் பொதுமக்கள் வீதிகளில் நடமாடுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் பெரிய தோட்டம் மெயின் வீதியில் நேற்று மாலை பஜ்ஜி போண்டா கடை ஒன்று திறந்து வைக்கப்பட்டிருந்தது. அங்கே மக்கள் கூட்டம் கூட்டமாக அதிக அளவில் நின்று பஜ்ஜிகளை வாங்கிக் கொண்டிருந்தனர். இதுகுறித்து தகவலறிந்த திருப்பூர் தெற்கு போலீசார் அந்தப் பகுதிக்கு விரைந்து சென்றனர். அங்கே கடையை திறந்து செயல்படுத்த அனுமதி இல்லை என்றும் தேவையில்லாமல் கூட்டம் கூடும் என்பதால் உடனடியாக கடையை மூடவேண்டும் என்றும் போலீசார் கூறினர்.

ALSO READ:  திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!
tiruppur protest2
tiruppur protest2

கட்டுப்பாட்டுப் பகுதியில் இதுபோன்ற நிகழ்வுகளை அனுமதிக்க முடியாது என்று போலீசார் அவர்களிடம் அறிவுறுத்தினர். ஆனால் அதற்கு அப்பகுதியைச் சேர்ந்த முஸ்லிம் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து சாலையில் திரண்டனர். பின்னர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

நோன்பு திறக்கும் நேரத்தில் பஜ்ஜி கடையை மூட அனுமதிக்க மாட்டோம் என்றும் பெரிய தோட்டம் பகுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் குணமடைந்து விட்டனர் என்பதால் இந்தப்பகுதியை கட்டுப்பாட்டு மண்டல பகுதியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும், நோன்புக்கஞ்சி காய்ச்சுவதற்கு அனுமதிக்க வேண்டும் என்றும் அங்கே திரண்ட முஸ்லிம் மக்கள் போலீசாரிடம் வற்புறுத்தினர்.

tiruppur protest
tiruppur protest

சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் உதவி ஆணையர் நவீன் குமார் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இது தொடர்பாக திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் தகவல் தெரிவிக்கப்படும் என்றும் அவர்தான் நடவடிக்கையை மேற்கொள்வார் என்றும் கூறி அங்கிருந்து அனைவரையும் அனுப்பி வைத்தனர். இதனால் அங்கே ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பரபரப்பு ஏற்பட்டது!

ALSO READ:  ₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

1 COMMENT

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Topics

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

விஜயின் வெற்றி – அதிர்ஷ்டமா? ஆளுமையா?

இலங்கை ஜெயராஜ் - இலக்கியப் பேச்சாளர்கேள்வி: விஜய்யின் தேர்தல் வெற்றியினைப் பார்த்தீர்களா?...

செங்கோட்டை – பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

பெங்களூரு-செங்கோட்டை - பெங்களூரு கன்டோன்மென்ட் இடையே ஒரு வழி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்!

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

சுதர்சன் ஜி தான் அருணாச்சல பிரதேசத்துக்கு வந்த முதல் சர்சங்கசாலக். 2007 ல் அவர் அந்த மாநிலத்திற்கு விஜயம் செய்தார் . 2011 ல் முதன்முதலாக அந்த மாநிலத்தில் சங்க சிக்ஷா வர்க எனப்படும் இருபது நாட்கள் நடைபெறும் பயிற்சி முகாம் நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அதில் பயிற்சி பெற்றனர்.

Entertainment News

Popular Categories