காத்திருந்த காதல்.. முடியாத ஊரடங்கு.. கோவிலில் முடிந்த எளிய திருமணம்!

marriage - 2026

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சேர்ந்த கண்ணன் என்னும் இளைஞர் கால் டாக்ஸி டிரைவராக பணியாற்றி வருகிறார். இவரும் மதுரை அலங்காநல்லூரைச் சேர்ந்த பிரியா என்ற பெண்ணும் 3 வருடமாக காதலித்து வந்துள்ளனர்.

இவர்கள் திருமணம் செய்து கொள்ள இரு வீட்டாரின் சம்மதம் கேட்க, எல்லாரும் பச்சைக்கொடி காட்டியுள்ளனர். அதனையடுத்து இவர்கள் திருமண பேச்சை ஆரம்பித்த சமயத்தில் ஊரடங்கு போடப்பட்டுள்ளது.

ஊரடங்கு முடியும் வரை திருமணம் நடத்த வேண்டாம் என்று இந்த காதல் ஜோடி முடிவு செய்திருந்த நிலையில், ஊரடங்கு தொடர்ந்து நீடிக்கப்பட்டுக் கொண்டே வந்ததால் திருமணத்தை நடத்த முடிவு செய்துள்ளனர்.

இரு வீட்டாரின் சம்மதத்துடன் கோவிலில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து ஏற்பாடு செய்துள்ளனர். அதன் படி வீட்டின் அருகே இருந்த விநாயகர் கோவிலில் நேற்று திருமணம் நடந்துள்ளது.

இந்த திருமணத்தில் ஹைலைட் என்னவென்றால், திருமணம் மொத்தமாக ரூ.2000 பட்ஜெட்டில் நடந்துள்ளது. தாலி, மாலை, அர்ச்சனை பொருட்கள் என அனைத்துமே அந்த பட்ஜெட்டிலேயே முடிந்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் பெண் வீட்டார் 2 பேர், ஆண் வீட்டார் 3 பேர் மற்றும் மணமக்கள் 2 பேர் என மொத்தம் 7 பேர் மட்டுமே திருமணத்தில் கலந்து கொண்டுள்ளனர். மேலும், வீட்டிலிருந்து கோவிலுக்கு நடந்தே சென்று திருமணம் முடிந்த பிறகும் நடந்தே வந்துள்ளனர்.

இவ்வாறு திருமணம் எளிமையாக நடந்து முடிந்து விட்டதால், ஊரடங்கு முடிந்த பிறகு ரிஷப்ஷன் வைக்க திட்டமிட்டுள்ளனர் இந்த காதல் ஜோடி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்..

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரை திருவிழா...

திமுக வேட்பாளர் வீட்டில் நகை கொள்ளை – வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது…

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் திமுக வேட்பாளர் வீட்டில் 122 சவரன் கொள்ளையடிக்கப்பட்ட...

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

யானைகளின் அணிவகுப்பு.. இலஞ்சித்தார மேளம்.. திருச்சூர் பூரம் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

Topics

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்..

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரை திருவிழா...

திமுக வேட்பாளர் வீட்டில் நகை கொள்ளை – வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது…

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் திமுக வேட்பாளர் வீட்டில் 122 சவரன் கொள்ளையடிக்கப்பட்ட...

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

யானைகளின் அணிவகுப்பு.. இலஞ்சித்தார மேளம்.. திருச்சூர் பூரம் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

37 ஆண்டுகளுக்கு முன்பு நான் வந்தது போலவே, நீங்களும் பணமின்றி, ஆனால் பாரதத்தின் நல்ல கல்வி மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்துடன் அமெரிக்காவிற்கு வந்தீர்கள்.

ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories