December 6, 2025, 5:05 AM
24.9 C
Chennai

காத்திருந்த காதல்.. முடியாத ஊரடங்கு.. கோவிலில் முடிந்த எளிய திருமணம்!

marriage - 2025

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சேர்ந்த கண்ணன் என்னும் இளைஞர் கால் டாக்ஸி டிரைவராக பணியாற்றி வருகிறார். இவரும் மதுரை அலங்காநல்லூரைச் சேர்ந்த பிரியா என்ற பெண்ணும் 3 வருடமாக காதலித்து வந்துள்ளனர்.

இவர்கள் திருமணம் செய்து கொள்ள இரு வீட்டாரின் சம்மதம் கேட்க, எல்லாரும் பச்சைக்கொடி காட்டியுள்ளனர். அதனையடுத்து இவர்கள் திருமண பேச்சை ஆரம்பித்த சமயத்தில் ஊரடங்கு போடப்பட்டுள்ளது.

ஊரடங்கு முடியும் வரை திருமணம் நடத்த வேண்டாம் என்று இந்த காதல் ஜோடி முடிவு செய்திருந்த நிலையில், ஊரடங்கு தொடர்ந்து நீடிக்கப்பட்டுக் கொண்டே வந்ததால் திருமணத்தை நடத்த முடிவு செய்துள்ளனர்.

இரு வீட்டாரின் சம்மதத்துடன் கோவிலில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து ஏற்பாடு செய்துள்ளனர். அதன் படி வீட்டின் அருகே இருந்த விநாயகர் கோவிலில் நேற்று திருமணம் நடந்துள்ளது.

இந்த திருமணத்தில் ஹைலைட் என்னவென்றால், திருமணம் மொத்தமாக ரூ.2000 பட்ஜெட்டில் நடந்துள்ளது. தாலி, மாலை, அர்ச்சனை பொருட்கள் என அனைத்துமே அந்த பட்ஜெட்டிலேயே முடிந்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் பெண் வீட்டார் 2 பேர், ஆண் வீட்டார் 3 பேர் மற்றும் மணமக்கள் 2 பேர் என மொத்தம் 7 பேர் மட்டுமே திருமணத்தில் கலந்து கொண்டுள்ளனர். மேலும், வீட்டிலிருந்து கோவிலுக்கு நடந்தே சென்று திருமணம் முடிந்த பிறகும் நடந்தே வந்துள்ளனர்.

இவ்வாறு திருமணம் எளிமையாக நடந்து முடிந்து விட்டதால், ஊரடங்கு முடிந்த பிறகு ரிஷப்ஷன் வைக்க திட்டமிட்டுள்ளனர் இந்த காதல் ஜோடி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories