காஞ்சியில் திருத்தேர் உத்ஸவம் இன்று கோலாகலம்

Published:

kanchipuram varadaraja perumal temple therottam - 2026
திருத்தேரில் ராஜ அலங்காரத்தில் எம்பெருமாள் ஸ்ரீதேவி சமேதராக எழுந்தருளி அருள்பாலித்த காட்சி

காஞ்சீபுரத்தில் உள்ள வரதராஜபெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோத்ஸவம் ஜூன் 6ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 7ஆம் நாள் உத்ஸவமான இன்று தேரோட்டம் நடைபெற்றது. அதிகாலை 3 மணி அளவில் ராஜ அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக ஊர்வலமாக வந்த எம்பெருமான் காந்திசாலை தேரடி பகுதியில் உள்ள திருத்தேரில் எழுந்தருளினார். திருத்தேரில் ராஜ அலங்காரத்தில் எம்பெருமாள் ஸ்ரீதேவி சமேதராக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

காலை 6 மணிக்கு மேளதாளங்கள் முழங்க வாணவேடிக்கையுடன் தேரோட்டம் துவங்கப்பட்டது. அமைச்சர்கள் சேவூர் ராமச் சந்திரன், கடம்பூர் ராஜூ, அதிமுக மாவட்ட செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ., பழனி, வி.சோமசுந்தரம், மாவட்ட பேரவை செயலாளர் கே.யூ.எஸ். சோமசுந்தரம் ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.

 

பக்தர்கள் ‘கோவிந்தா கோவிந்தா’ என்ற கோ‌ஷத்துடன் வடம் பிடித்து திருத்தேரை இழுத்தனர். காந்திசாலை, காமராஜர் வீதி, இந்திராகாந்தி சாலை, ராஜவீதிகள் வழியாக திருத்தேர் வலம் வந்தது. லட்சக்கணக்கான பக்தர்கள் வழிநெடுக பெருமாளுக்கு நிவேதனப் பொருள்களுடன் காத்திருந்தனர். நகரின் பல்வேறு பகுதிகளிலும் பக்தர்களுக்கு நீர்மோர் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதி மானி தலைமையில், உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img