கரூர் பரணி பார்க் பள்ளியில் பட்டம் பெற்ற மழலைகள்

Published:

bharani photo கரூர் பரணி பார்க் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் மழலையருக்கான பட்டமளிப்பு விழா மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு பரணி கல்வி நிறுவனங்களின் தாளாளர் எஸ்.மோகனரங்கன் தலைமை வகித்தார். செயலர் திருமதி பத்மாவதி மோகனரங்கன் முன்னிலை வகித்தார். பரணி பார்க் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியின் முதல்வர் கே.சேகர் வரவேற்புரையாற்றினார். பரணி கல்வி நிறுவனங்களின் முதன்மை முதல்வர் முனைவர் சி.ராமசுப்பிரமணியன் விழா குறித்து சிறப்புரையாற்றுகையில், அறிவியல் கண்காட்சி மற்றும் மழலையர் திருவிழாவில் மாணவர்களின் பங்களிப்பு பற்றி பாராட்டி பேசினார். இவ்விழாவில் 180 மாணவர்களுக்கு பட்டமளிப்பும் 648 மாணவர்களுக்கு பரிசளிப்பும் பள்ளியின் தாளாளர் எஸ்.மோகனரங்கன் அவர்களால் வழங்கப்பட்டது. விழா முடிவில் துணை முதல்வர் கே.மகாலட்சுமி நன்றியுரையாற்றினார். விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளியின் நிர்வாக அலுவலர் எம்.சுரேஷ், துணை முதல்வர்கள் கே.கௌசல்யா, பி.ரேணுகா தேவி மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள் செய்திருந்தனர்.

Related articles

Recent articles

spot_img