ஐ.ஏ.எஸ். அதிகாரி ரவி மர்ம மரணம்: சிபிஐ விசாரிக்க மறுப்பு

Published:

பெங்களூரு: ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.கே.ரவி மர்மமான முறையில் மரணம் அடைந்தது தொடர்பான வழக்கை சிபிஐ எடுத்து விசாரிக்க மறுத்துவிட்டது. டி.கே.ரவியின் மர்ம மரணம் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று எதிர்க் கட்சிகள் போராட்டம் நடத்தின. முதலில் மாநில காவல் புலனாய்வு அமைப்பே இதனை நடத்தும் என்று மாநில அரசு அறிவித்தது. ஆனால் அரசியல் நெருக்கடிகள் இருந்ததால், மாநில அரசு சிபிஐ விசாரணைக்கு இந்த வழக்கை எடுத்துக் கொள்ள ஒப்புக் கொண்டது. இதை அடுத்து, இந்த வழக்கினை விசாரிக்க எடுத்துக் கொள்வதாக சிபிஐ அறிவித்தது. ஆனால்,சிபிஐக்கு இந்த வழக்கை அனுப்பும் போதே, இன்னும் 3 மாத காலத்துக்குள் வழக்கை விசாரித்து முடிக்க வேண்டும் என்று மாநில அரசு சில நிபந்தனைகளை விதித்தது. ஆனால், இது போன்ற நிபந்தனைகளை எங்களுக்கு விதிக்க வேண்டாம், எனில் இந்த வழக்கை நாங்கள் எடுத்துக் கொள்ளப் போவதில்லை என்று சிபிஐ இன்று அறிவித்தது. இருப்பினும் முதல்வர் சித்தராமையா, இதனை மீண்டும் சிபிஐக்கு அனுப்புவோம் என்று கூறியுள்ளார்.

ALSO READ:  கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

Related articles

Recent articles

spot_img