கொரோனா: திருச்சியில் முதல்வர் பங்கேற்கும் கூட்டம்.. கலந்து கொள்ளும் அதிகாரிக்கு தொற்று!

cm

குடிமராமத்து பணி ஆய்வு கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருச்சி செல்லும் நிலையில், அவருடன் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவிருந்த அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

முதல்வர் நிகழ்ச்சிக்கு வருகை தருவதால், ஆட்சியர் அலுவலகத்தில் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதனடிப்படையில், திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் துறை அதிகாரிகள், ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வந்தது.

மாவட்ட ஆட்சியர் சிவராசு மற்றும் திருச்சி அரசு பொது மருத்துவமனை மருத்துவர் வனிதா ஆகியோருக்கும் பரிசோதனை நடத்தப்பட்டது.

மேலும், மருத்துவர்கள், சுகாதார துறை ஊழியர்கள், வருவாய்த்துறை, பொதுத்துறை, வேளாண்துறை மற்றும் ஆற்று பாதுகாப்பு கோட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து, மறுநாள், செய்தியாளருக்கும், புகைப்பட கலைஞர்களுக்கும் கொரோனா பரிசோதனையானது நடத்தப்பட்டது. இந்த ஆய்வு கூட்டத்தில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால், முதல்வர் வருகையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த பரிசோதனை தொடர்ந்து நடைபெற்று வந்தது.

பரிசோதனையின்போது கொரோனா தொற்று இல்லை என்பவர்களை மட்டுமே அலுவலகத்தில் அனுமதிக்கப்படுவதாகவும் மற்றவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் மாவட்ட அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், மயிலாடுதுறையில் உள்ள காவிரி வடிநீர் கோட்ட செயற்பொறியாளர் மற்றும் அவருடைய ஓட்டுநர் உள்ளிட்டோர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளனர்.

அதன் முடிவுகள் வெளியான நிலையில், செயற்பொறியாளருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால், திருச்சியில் முதல்வர் பங்கேற்கவுள்ள நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது, அவர் மயிலாடுதுறையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

Topics

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

Entertainment News

Popular Categories