*நெல்லை மாவட்டம்கீ ழப்பாவூர் பெரிய குளம் **54** ஏக்கர் **85** சென்ட்
பரப்பளவு அமைந்துள்ளது. பெரியகுளத்திற்கு தண்ணீர் மேற்கு தொடர்ச்சி மலை
பகுதியான செங்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள மலைப்பகுதியில் இருந்து
வருகிறது. இதனால் போதிய தண்ணீர் வருவது பாதிக்கிறது.இதனால் பல விவசாயி
நிலங்களுக்கு நீர்வரத்து இன்றி பாசனம் தடைபடுகிறது.*
*மேற்கு தொடர்ச்சி மலையில் மழை பெய்து தண்ணீர் வரத்து சமயங்களில் இந்த
அமலைசெடிகள் மற்றும் முட்செடிகளால் நீர் வரத்தின் வேகம் குறைவும். போதிய அளவு
தண்ணீர் தேக்க முடியாத நிலை உள்ளது. *
*கீழப்பாவூர் பெரிய குளத்திற்கு வரும் சுமார் **3.200** கிலோ மீட்டர் தூர
கால்வாயை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என கீழப்பாவூர் பகுதி விவசாயிகள்
பிரபாகரன் எம்பி யிடம் கோரிக்கை வைத்தனர்.*
*கோரிக்கையினை ஏற்று கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி குளத்தில் காணப்படும்
ஆக்கிரமிப்பு செடிகளை அகற்றுவதாக உறுதியளித்தார் ,இதையடுத்து பொதுப்பணித்துறை
சார்பில் தூர் வாரும் பணி துவங்கியது *
*முதற்கட்டமாக கீழப்பாவூர் பெரியகுளத்திற்கு தண்ணீர் வரும் நுழைவு கால்வாய்
(வாய்கால் பாலம் ) பகுதியில் ஆக்கிரமித்து இருந்த அமலை செடிகள் மற்றும்
முட்செடிககளை அகற்றும் பணியின் தொடங்கி வைத்தார் *
*பின்னர்கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி கூறுகையில்**, **இக்கால்வாய் நீண்ட
காலமாக தூர் வாரப்படாமல் இருந்து வருகிறது. தற்போது மேலப்பாவூரில் இருந்து
கீழப்பாவூர் பெரியகுளம் வரையிலான **3.200** கி.மீ. தொலைவிற்கு இக்கால்வாய்
முற்றிலுமாக தூர் வாறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்பணிகள் நிறைவு
பெறும் பட்சத்தில் கீழப்பாவூர் பெரியகுளத்திற்கு தண்ணீர் தடையின்றி வரும்.
அத்துடன் நாகல்குளம்**, **கடம்பன்குளம்**, **தன்பத்து குளம் ஆகிய
குளங்களுக்கும் விரைவில் தண்ணீர் செல்லவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதனால்
விவசாயிகள் மிகுந்த பயன்பெறுவர் என்றார்.*
*இந்நிகழ்ச்சியில் சிற்றாறு வடிகால் பாசன உப கோட்ட உதவி செயற்பொறியாளர்கள்
சுப்பிரமணிய பாண்டியன்**, **சண்முகவேலு**, **முன்னாள் ஊராட்சி தலைவர்
ராதா**, **தீப்பொறி
அப்பாத்துரை**, **வி.கே.கணபதி**, **பாஸ்கர்**, **கண்ணன்**, **கணேசன் உட்பட
பலர் கலந்து கொண்டனர்.*
*பெரியகுளம் மூலம் சுமார் **1600** ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று
வருகிறது. மேலும் பெரியகுளம்*



