December 5, 2025, 7:17 AM
24.9 C
Chennai

சென்னைக்கு இ-பாஸ் இன்றி சென்ற கார்! ஓட்டுனர் உரிமையாளர் மீது வழக்கு பதிவு!

e pass 1 - 2025

கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியில் இருந்து தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு செல்ல விருப்பம் உள்ளவர்களுக்கு இ-பாஸ் பெற்றுத் தந்து அழைத்துச் செல்வதாக தொடர்பு எண்ணுடன் வாட்ஸ் அப்பில் தகவல் பரவியது.

இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன், உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோட்டாட்சியர் பால சுப்ரமணியனுக்கு உத்தரவிட்டார்.

அதனடிப்படையில், அரவக் குறிச்சி கிராம உதவியாளர் சுப்பிரமணியனை தொடர்புடைய எண்ணுக்கு பேசவைத்து, சென்னைக்கு செல்ல எவ்வளவு ஆகும் எனக் கேட்டபோது, ரூ.2 ஆயிரத்தை அரவக்குறிச்சியில் உள்ள டி.டி. டிராவல்ஸில் செலுத்தினால் அன்று மாலையே அழைத்துச் செல்கிறோம் என்று கூறியுள்ளனர். அதன்படி, சுப்பிரமணியன் ரூ.2 ஆயிரத்தை நேற்று முன்தினம் செலுத்தியவுடன் ஒரு கார் வந்தது.

அதை வெங்கடேஷ் என்பவர் ஓட்டினார். சுப்பிரமணியன் அதில் ஏறிக்கொண்டார்.

புறப்பட்ட சிறிது நேரத்தில் ஏற்கெனவே திட்டமிட்டபடி காத்திருந்த போலீஸார் காரை நிறுத்தி விசாரித்தனர். உரிய அனுமதியின்றி, இ-பாஸ் இல்லாமல் 3 பேரை அந்தக் காரில் சென்னைக்கு ஏற்றிச் செல்ல இருந்தது தெரிய வந்ததை அடுத்து காரை பறி முதல் செய்து காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

கோட்டாட்சியர் பாலசுப்ரமணியன் பரிந்துரையின் பேரில் அரவக்குறிச்சி போலீஸார், காரின் ஓட்டுநர், டிராவல்ஸ் உரிமையாளர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories